செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஸாப்தபதீனம் ritual

ஒருவனுடன் ஒத்துப்போய்  நட்பு தலைப்படுவதாயின்  அவனுடன் ஏழு அடிகள்  இணைந்து  எடுத்துவைக்கவேண்டும். ஏழாவது  அடி  வெற்றியுடன்  எடுத்துவைத்து முடிக்க  இருவரும் நண்பர்கள் ஆகிவிடுவர்   இப்படி ஒரு வழக்கம்  \பண்டைக்   காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

பிற்காலத்தில் திருமணங்கள்  அமைவுற்றுச்   சடங்குகள் ஏற்பட்ட ஞான்று
இந்த முறை அவற்றுள்ளும் புகுந்தது .  திருமணம் என்பது ஆடவரும் பெண்டிரும் கூடி வாழ்வு முழுவதும் தொடரும் ஒரு நட்பே ஆதலின்.

மணமகனை நோக்கி வருகின்ற மணமகள் ஏழு அடி எடுத்துவைத்து நடந்து அவனை அடையவேண்டும் ,  தீவலம் வருகையில் இருவரும் இணைந்து ஏழு
அடிகளில் சுற்றிவந்து முடிக்கவேண்டும். குறைதல் கூடாது

இதுவே வடமொழியில் ஸாப்தபதீனம் எனப்பட்டது.




======================================================================

கருத்துகள் இல்லை: