செவ்வாய், 3 ஜூலை, 2012

Nandan PaNan conversation poem MY REPLY:

கவலைஒன் றில்லை நெஞ்சில்
கடவுளைக் கடைந்து கண்டால்,
தவலையுள்* தயிரை மத்தால்
தவறாமல் ஆய்ச்சி போலே; 
துவளுறும் துன்ப வாழ்வில்
துறக்கமே காணும் பாதை
சவளறத் தந்த ஐயர்
சாந்துணை ஏத்தத் தக்கார்.


அன்றுள நந்தன் பாணன்

ஆயவர் பேசிக் கொண்டார்
நன்றிவை சொன்ன பாங்கு
நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
ஒன்றது தெய்வம்; மாலும்
உயர்சிவ னாரும் என்ற
தென்றிசை மேலோர் வாய்மை
தெளிவுற நீவிர் சொன்னீர்.



My internet  senior friend  Suda wrote a imaginative poem, in which Nandan and PaNan had a conversation. It was quite interesting. I wrote, this  stanza in appreciation of the poem.  8th November 2010, 07:29 PM

கருத்துகள் இல்லை: