செவ்வாய், 17 ஜூலை, 2012

நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இங்குதானே இருந்தாய்
பொங்கும் மகிழ்வுடன்!
வேறு கவனத்தில்
நூறு கோடி எண்ணங்களின்
கெடுபிடி தன்னில் தவித்துவிட்டு,
இல்லம் திரும்பி என்
செல்லமே நானுன்னை
மீண்டும் தரிசிக்க எண்ணுகையில்
எங்கோ மறைந்தனையே....
எங்குதான் சென்றாயோ
மீண்டும் நானுனைக் காண்பேனோ!
நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இன்றிரவு என் கனவிலாவது வரமாட்டாயா!

எனை நீங்கி,
முன்பின் அறியா இடத்தில்
மிளிர்வதும் உனக்கு அறமோ.
தளர்வுற்றுத் தாழ்வதென்  தரமோ!
இதுவே நான் வாங்கிவந்த வரமோ!

கருத்துகள் இல்லை: