ஞாயிறு, 1 ஜூலை, 2012

what poem is this? Just enjoy it!


முதுமை முடுகிவந் துங்கள் முனைப்பயர்த்திப்
பையப் பணிகளையே செய்யப் புகுத்திடினும்,
நோய்கள் நிலைமிகுந்து வாய்கண்கை நேர்தளர்ந்தும்
ஆய்வை எழுத்தையுமோர் பாவைச் புனைவதையும்
சூடு தளர்த்திச் சுடர்குறைத்த வேளையிலும்
தம்வேலை தம்குடும்பம் என்றசுமை மிக்குவந்து
இம்மியும் காலம் இசைந்துவராப் போதினிலும்
செந்தமிழ் யாண்டும் மறவாது வந்தவழி
எந்த நிலையிலும் பிறழாது இயங்கியவர்
சுந்தர ராசன் சோர்விலார்  வாழ்கவாழ்க!
அந்தர  அழகுக் கவிகள்  இவண்புனைக!
பொடிக்குத்தான்  போயிலையாய் பொற்கவிகள் ஈந்த
அடிக்கொரு பொன்னாய் அணிபெற்று நிற்கவே.
வெள்ளை அகவல் கலிவஞ்சி என்றுநூல்
உள்ள அனைத்துமே ஓங்க விளைத்திடுக.
தொல்லறி வாளர் திறம்பெற்றே
அல்லவை நீக்கியே பல்புகழ் நேர்படவே.

யாவும் நன்று. இந்த வரிகளைத் திரு சுந்தரராஜ் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். என்ன பா என்று
இப்போது சொல்ல முடியவில்லை. கண்டபடி எழுதியது. சின்னக்கண்ணன் அவர்கள், இதைச் சுவைத்துக் கருத்துகளை வழங்க வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: