ஒருவரோ அல்லர் இருவரோ அல்லர்
அறுபதும் மூன்றுமே ஆனோர் தொகையாம்
திருவினை வாழ்த்தித் திறம்பெற் றவர்கள்
மறுவற நின்றவர் மாதவத் தோராம்.

அனையவர் தந்தவை ஆழ்கடல் அன்ன
இணையறு பாடம் இறைவர்த் தொழுதல்
புனைகதை அன்றிது போற்றிநின் றார்க்குத்
துணையென வந்து துயர்களை வுண்மை.


அன்பும் அறமும் பிறழ்செலவு உற்றவன்
மன்பதை தன்னில் மயக்கழிந் தானெனத்
தென்பட நின்று தெருள்பெறும் காலையே
அன்பரை ஆள வருவான் இறைவனே!