புதன், 4 ஜூலை, 2012

மறைத்திறம் வழுவிடா மானிட மலை

நந்தனோ டெந்தபன் னாயன்மார் வந்துமே
ஒத்தியல் கின்றதாம் மொத்தநற் கருத்திது
மந்தனும் சொந்தவை குந்தமென் கைகளில்
நந்துமோர் நன்னிலை என்றதை ஏற்பனே.


வாழவே பிறந்தவர் வளநலம் கொண்டவர்
சூழுதுன் பனைத்துமே சூழ்ந்துணர்ந் தழிப்பவர்
ஏழ்பிற விகள்வரும் இடர்களைந் தொன்றுடன்
ஆழ்கடல் நீந்தியே அப்பால் களிப்பவர்.


பிறவியின் பயனைஇப் பிறவியி லடைபவர்
துறவியே ஆயினும் இல்லுளார் ஆயினும்
இறையொடு மொன்றியே நிறைகொள நின்றுள
மறைத்திறம் வழுவிடா மானிட மலையவர்.



கருத்துகள் இல்லை: