புதன், 4 ஜூலை, 2012

மதிகாண நிதிவேண்டும்


திருவுண்டு எனும்போதும் மதிகாண நிதிவேண்டும்
திருவென் றிருந்தாலே போதும் --- அதில்
திருத்தமே வேண்டாமெப் போதும்!


,

நந்தனாருக்கும் திருபாணாழ்வாருக்கும் கவிதீட்டிய சுதாமருக்குப் பாடியது



நந்தனையே சிவனேற்று நன்மை செய்தார்'-- அது
நாட்டினுக்கே இறையன்பின் தன்மை காட்ட!
விந்தையிதே பாணருக்கும் அந்தமில்லார் -- பத்தன்
வேண்டியதை அருள்செய்தார் மென்மை கூட்ட.

அந்தமில்லார் = சிவனார். பத்தன் = பக்தன்.



எனது கவிகள் சுதாமர் தாத்தாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பலவற்றை மேற்கோளாகக் காட்டி அவர் என்னுடன் கவிதைகளால் "உரையாடினார்" எனில் மிகையன்று. தாத்தாவே கொஞ்ச நாள் தோழியாகிவிட்டார்.



திருமதியா என்றார்க்கு, மதிகாண நிதிவேண்டும் என்று பதில் இறுத்தது அவருக்குப் பிடித்திருந்தது,

கருத்துகள் இல்லை: