செவ்வாய், 10 ஜூலை, 2012

due appreciation or praise


பாராட்டத் தக்கவரை பாராட்டாமல் விடுதலும்
குற்றமே


யாரோடும் மானிட நேயம் --- பொலிந்திட
யாத்திடும் பாக்களில் காத்திடும் பண்பினில்
பாரினில் செந்தமிழ் மேவி -- குழைந்திடப்
பயக்கும் கருத்துகள் தேனுள் தினைத்துகள்

இத்தகு பாவலர் தம்மைப் --- புகழ்ந்தி
இனிய சிலச்சில பணிவில் சொலத்தகும்;
பத்தொடும் ஒன்றெனக் கும்மி --- அடித்தொரு
பக்கல் களைந்திடில் பொக்கம் விளைந்திடும்.



குறிப்பு :--தேனுள் தினைத்துகள் = தேனும் தினைமாவும் போல இனிமையானது.
பக்கல் - (ஒரு ) ஓரமாக;  களைந்திடில் = வீசிவிட்டால்.
பொக்கம் - குற்றம்'  அல்லது பிழைபடுதல்




பலியிடத் தயங்காப் பாழ்மனத் தோர்நிறை
உ;லகிடை உலவியும் ஓருயிர்க் கிரங்கி
எலியென்றும் எள்ளாது நலிவொன்றும் கொள்ளாது
மலைக்கும் மனம்தரு கனம்சிறு கண்ணன் 


குறிப்பு :-


எலிக்கும் வீட்டில் இடம் வரையாது வழங்கினார்
மலைக்கும் நிலைக்க இடம் தருக என்றார்.
சிறந்த உள்ளம் உடையார்......
.






சுந்தர ராசனார் சொல்லாட்டோ இத்திரியில்
மந்திர நன்மொழிபோல் மாண்புற்றுச் -- செந்தமிழை
வெல்பரந் தாமரின் வெள்ளியல் மாறாத
நல்விருந்தாக் கிற்றே நமக்கு.

குறிப்பு 


சொல்லாட்டு - சொல்விளையாட்டு. 
வெல் பரந்தாமர் - ஒரு தற்கால இலக்கண ஆசிரியர்.
வெள்ளியல் - வெண்பா இலக்கணம்.




குறள்வெண்பா :


பக்கமலை போனாலென் தக்கசின்னக் கண்ணனையே
ஒக்குமலை ஒன்றில்லாப் போது!

தொலைமலையால் யாதுயர்? சின்னக்கண் தோன்றல்
கலைமலையாய் முன்னெழுமிக் கால்/




குறிப்பு:  முன்னெழுமிக் கால் =  முன் எழும் இக்கால்,  அதாவது முன்னே தோன்றுகின்ற இப்பொழுது. 

கருத்துகள் இல்லை: