புதன், 4 ஜூலை, 2012

அமுதப் பெருநலம் அடையத் தகும்படி....








-
வெயிலும் நிழலும் ஒளியும் இருளும் இன்பமும்
துன்பமும் மண்மிசை இயல்பொருளே;

குயிலும் மயிலும் கூகையும் காக்கையும் கொக்கும்
குறைநிறை அடைதற் குரிபொருளே;

வயலில் பயிரும் வெயிலில் கருகி மழையில்
அழுகி அழிவது தெரிவதனால்,

இயவுள் இயற்றிய கரும வினையென இவற்றை
மனிதனும் நினைப்பதன் பயனறிவோம்.


நடப்பவை யாவும் நடக்கவி வைதாம் நாதனின்
செயலென நடங்துகொண்டால்,

அடைப்பதும் வேண்டுமோ துன்பம் இருள்புகு வாயிலை,
அறிந்திவை கூறிட வேண்டியவாம்'

துடைப்பது கண்ணீர்! அதற்கொரு மேலவன் துணியொடு
நிற்பவன் என்று துணிந்துணர்ந்தால்

மடைப்பளி நின்றிடும் மலைப்புறு வேதனை மாநில
மக்களும் கொண்டிட நடைபெறுமோ?


காரைக் காலவர் கண்டு மகிழ்ந்துயர் வேறக்
குறித்திடும் அம்மையின் வரல்நெறியில்

ஓரைந் தொடுக்கிய சாரத் தொடுதிகழ் வாழ்வைத்
தரித்தவர் யாரும் திறல்பெறுவார்.

தீரத் தெளிந்தவர் தேடும் அனைத்திலும் கூறப்
படுமறம் பொருளொடும் இன்பமிவை

ஆரத் தழுவிய அமுதப் பெருநலம் அடையத்
தகும்படி அணிசெயும் உலகமைப்போம்.





கருத்துகள் இல்லை: