ஞாயிறு, 3 ஜூன், 2018

அல்பம், சொல்பம் முதலிய சொல்வகைகள்,

அல்லாதது  இல்லாதது என்பவற்றுள் பொருள் வேற்றுமை சிறிது உளதென்பதை நீங்கள் அறிவீர்.    ஒன்றை இல்லை என்றால் அப்பொருள் இவ்வுலகின்கண் காணமுடியாதது என்று கொள்ளுதல் வேண்டும்.   அல்லாமையோ  அதுவன்று, பிற என்று சொல்வதாகும்.

மிக்கப் பழங்காலத்திலே  அல் என்ற சொல்லைப் பயன்படுத்தித் தமிழர் சொற்களைப் புனைந்துள்ளனர்.   உயர்திணை,   அஃறிணை என்னும் பகுப்பில் அஃறிணை என்ற சொல்லிலிருந்து அது  " திணை அல்லாதது "  என்று பொருள்தருதலை நன் `கு உணர்ந்துகொள்ளலாம்.  உயர்திணைக்கு உயர்  என்னும் மேன்மைக் குறிப்பு பயன்படுத்தப்படுவதால்,  அதன் மாற்றுக்கு "தாழ்திணை"   என்று பெயரிடப்படவில்லை என்பதையும் உன்னுக.   தாழ்வு என்று வகைப்படுத்தாமல் அஃறிணைப் பொருள்களைத் திணைப்பகுப்பில் உட்படுத்தாமல் திணை அல்லாதவை என்று மட்டுமே பகுத்துள்ளனர் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.  இது எங்ஙனமாயினும்  "அல்" என்னும் சொல் ஈண்டு பயன் கண்டுள்ளமைமட்டும் குறித்துக்கொள்ளுங்கள்.

தீபகற்பம் என்ற சொல்லை ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.

இனி நாமெடுத்துக்கொண்ட அல்பம் என்ற சொல்லுக்கு வருவோம். கணக்கில் கொள்வதற்குத் தரம் அல்லாத பொருளே  அல்பம் ஆகும்.   அல்+பு+அம் = அல்பம்.  இது புணர்த்தப்படின் அற்பம் என்றாகும். தமிழிலிது புணர்த்தப்பட்டே வழங்குவது ஆகும்.   இச்சொல் பேச்சு வழக்கில் அல்ப்பம் என்று வழங்கும்.   லகர ஒற்றும் பகர ஒற்றும்  அடுத்தடுத்து நிற்றல் செந்தமிழ் முறையன்று ஆதலின் தமிழியல்பு பற்றி அது அற்பம் என்றே வரவேண்டும்.

இதே முறையை மேற்கொண்டு  சொல்பம் என்ற சொல்லும் பயனுக்கு வந்துள்ளது.  சொல்பமாவது  சொல்லத்தகுந்த எண்ணிக்கையிலானது என்பதுதான்,  இது சொல்லுதல் என்னும் வினையடித்தோன்றிய சொல்.  அற்பம் என்ற சொல் போலவே இதுவும் புணர்த்தியே சொல்லாய் அமையும்.   சொல்பம் என்னாமல் சொற்பம் ஆகும்.   அதுவே செந்தமிழியற்கை.

அயல் என்ற சுட்டடிச் சொல்லிலே  அல் வந்துள்ளமை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அயல் என்றால் அங்கு அல்லது அவ்விடத்தினது அல்லாதது என்பதுதான்.  அ+அல் என்று எளிமையாகவே சொல் அமைந்தது,  அன்னியன் என்ற சொல்லும் நல்லபடியாகப் புனைந்ததே.   நீயும் நானுமல்லாத பிறன் என்பது பொருள்.  இதை அல்+ நீ + அன் =  அன்னியன் ஆனது.   இதில் நீ என்பது நி என்று குறுகிற்று.  பழம்+நீ என்பது பழநி என்று குறுகினமைபோலுமே இதுவாம். நானும் நீயுமலாதான் அன்னியன் என்பது மிகநன்றாய புனைவு ஆகும்,  இது அந்நியன் என்றும் எழுதப்படும்.  நீ என்பதே நி என்று குறுகினமையால் அந்நியன்  என்று  எழுதுவது பொருத்தமாகத் தோன்றக்கூடுமெனினும்,  அல்+நி என்பது அன்னி என்று புணருமாதலின் அன்னியன் என்பதே நலமாம்.

அல் என்பது கடைக்குறைந்து அ என்று வந்து ஒரு முன்னொட்டாகப் பிறமொழிகளையும் வளப்படுத்தியுள்ளது.   எடுத்துக்காட்டு:  நீதி -  அநீதி எனக் காண்க.

மீண்டும் கலந்துரையாடுவோம்.


சனி, 2 ஜூன், 2018

Farmers Protest in India.

There is an ongoing farmers' protest in India at the moment.   It appears the farmers are demanding the waiver of their loans.

 But it is noted that most of the loans are never repaid.  There is also no demand being made for the repayment of such  loans.    No one also has been sued or imprisoned.

The loans were given by the previous government in  India and should have been written off during their rule itself. They failed to do so.

 In the circumstances there is no issue.

 Waiver will be just a paper exercise. 

 Indian agriculture minister says it is a gimmick by opposition  politicians.

 It appears to be so.

சுகஸ்த சுவச்ச என்னும் சொற்கள்.

உலகில் ஒருபொருட் பலசொற்கள் மிகுதியாய் உள்ள மொழிகளில்
சமஸ்கிருதம் மேல் நிலையில் உள்ளதென்று தெரிகிறது. ஒருபொருள் குறித்த சொற்கள் ஏராளமாக உள்ளன.  கவிதையோ கட்டுரையோ எழுதவேண்டுமென்றால் சொற்களை எளிதில் கொள்ளப்பெறலாம்.
இதனை மொழிவளம் என்பர்.

தமிழிலும் இத்தகைய சொற்கள் உள்ளன.

சுஸ்த,  சுஸ்தித,   ஸ்வச்ச, விரோக என்று பல காணப்படும் சமஸ்கிருதத்தில்
உள்ள சொற்களைப் பார்ப்போம்.

உகத்தல் என்பது தமிழ் வினைச்சொல்.  இதிலிருந்து உகந்த  ( விரும்பத்தக்க) என்ற வினை எச்சம் வந்துள்ளது காணலாம்.  நோயின்மையே உடலுக்கு உகந்த நிலை.    இதிலிருந்து :   உகந்த >  சுகந்த என்ற சொல்  அமைந்தது.

சுகந்த மணம் தரும் ஊதுபத்தி என்று விளம்பரத்தில் எழுதுவர்.  அகரத்திலிருந்த அதன் வருக்க இறுதிகாறும் உள்ள எழுத்துக்களில் ஒன்றை முதலாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சொல்,  அதற்கேற்ற சகர வருக்கமாகத் திரியும் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது.   உகரத்துக்கு ஏற்றது சுகரம்.  ஆகவே உகந்த என்பது சுகந்த என்றாயிற்று.

வேறு எடுத்துக்காட்டுகள்:

அடுதல் என்றால் நெருப்பில் வைத்துச் சமைத்தலாகும்.   இதிலிருந்து அட்டி என்று சொல் அமைந்து    திரிந்து சட்டி ஆனது, சட்டுவம் என்பதும் இதிலிருந்து  அமைந்ததே.   அடு> சடு>  சட்டி.  அடு>  அட்டுவம்>  சட்டுவம்,

அமணர் >  சமணர்.

இறுதி வடிவங்கள் அமைந்து வழக்கில் வந்தபின்   இடைநிலை வடிவங்கள் மறைதல் பெரிதும் உண்மையாகும்.

இனி,  உக  >  சுக >   சுகம்.

சுக >  சுகத்த > சுகஸ்த >  சுஸ்த.  ( ககர மறைவு_)

சுக >  சுகத்து  இது  அ   >    சுகத்தித  >  சுகஸ்தித > சுஸ்தித.

சுக >   சுகத்த  >  சுவத்த >  சுவச்ச.

இவையெல்லாம் காட்டப்பெற்ற மூலங்களினின்று  வளப்பிக்கப்பட்டவை.

நலம் அல்லது சுகம் ( < உக : உகத்தல்)  குறிக்கும் வேறுசொற்கள்::

அகடம் :   கடு (கடுமை);  கடு> கடம்;   அல் > அ:  அல்லாதது.    அகடம்:
கடுமையல்லாத நிலை;  அகடம் -  உடல் நலம்.

அனாமயா:     அன் +  மாய.     அன் < அல் (அல்லாதது).   லகரனகரப் பரிமாற்றம்.
மாய்தல்; மாய:  இறத்தல், அழிதல்.    அன்+ஆ+  மய.  மாய என்பது மய என்று
குறுகுதல்.  ஆ=  ஆகுதல்.       மாய்தல் அல்லாததாகுதல்.  ஆகவே சுகமான நிலை.

கல்ய  =  நலம்.    கல்லுதல்: தோண்டி அல்லது முயன்று மேற்கொள்வது.
கல்+ய்+ அம் =  கல்ய.   அம்= அ (  மகரம் கெடுதல் ). 

க்ஷேம்ய :  நலம்.   ஏம் =  பாதுகாப்பு.  ஏல் > ஏம். (பழந்தமிழ்ச் சொல்).  ஏற்ற நிலை.  ஏல் >ஏற்ற (ஏல்+து+அ).   லகரமகரப் பரிமாற்றம்.   ஏமம்>சேமம்> 
க்ஷேமம்.

இன்னும் பல.  பின்னர் இடுவோம்.   



வெள்ளி, 1 ஜூன், 2018

சளியும் பிடித்துவிட்டால்.......

சளியும் பிடித்தால் அளியேனோ  யானே
தலைகனக்க மூக்கே  தடைக்கும்  ---- பலதுன்பம்!
கோலெழுதப்  பேரசதி  கொக்கொக்  கிருமலுமாம்
வாலயர்ந்த  நாய்போல் வரும்.

அம்மாவும் நோய்மனையில் ; அங்கும்போய்ப் பார்த்திட்டால் 
சும்மா இருக்கச்  சுருதியும்  ------  இம்மியுமே
விம்மாதே;  யாண்டும்தான்  வீழ்ந்துறங்கி வாண்டைப்போல்
கும்மாளம் இல்லாக் குலை.

இதன் பொருள் :

பாட்டு 1

யானே அளியேனோ  சளியும் பிடித்தால்  =   நீர்க்கோவை ஏற்பட்டு
விட்டால் நான் பரிதாபத்துக்கு உரியவள் ;   ஓ  அசை .
தலை கனக்க  மூக்கே  தடைக்கும் -   தலை கனமாகும் ,  மூச்சு
அடைக்கும்;
பல துன்பம் -   இவ்வாறு பல துன்பங்கள் .
கோலெழுதப்  பேரசதி  -  எழுது கோலால்  எழுதவும்  பெரிய 
அயர்வு  ஆகும். 
கொக்கொக்  கிருமாலுமாம் -  இவ் வொலிக்குறிப்புடன்  இருமலும் 
உண்டாகும் .  

வாலயர்ந்த  நாய் போல் வரும் :  வாலை ஆட்ட ஆற்றலற்ற 
நாய் போல என்னுடல்  ஆகும்.

ாட்ட2

அம்மாவும் நோய்மையில் -   என் ாயும் மத்ுவையில்
 உள்ளார்.
ங்கும் போய்ப் பார்த்ிட்டால் -  என் நோய் நிலையில் அங்கும் 
ென்று பார்க்கங்கால்;
ும்மா இருக்க  -  அந்ோய் மையில் ஏும் ெய்யாமல் இரந்தால்;;
ுரியும் இம்மியுமே  விம்ம-  எனுரி கஞ்ும்  
எழாட்டே;    னம் முற்ும் ெயல்பாடும் கந்து 
ேலுறாட்டே என்பு.  யாண்டும் -  எப்பும்;
ும்மாளம் இல்லா -   ஓடியாடல் இல்ல;
ாண்டைப்போல் வழ்ந்துறங்கி  -  ஒரிறுபிள்ளைபோல் விழந்த
ங்கி;
ுலை -  குலந்துபல் ந்தேறும்  என்றாறு.

   இவை முன் வந்தொருட்குறிப்புகள்:  


அளியேனோ -  பரிதாபத்துக்குரியவள் நானோ.
மூக்கு (ஆகுபெயர் ) - மூச்சு
தடைக்கும்  -  (மூச்சைத் )  தடுக்கும்  ( அடைக்கும் )
கோலெழுத  -  கோலால் எழுத;  பேனா எடுத்து எழுத.
(வேற்றுமைத் தொகை ).
பேரசதி :  பெரிய உடல் சுணக்கம்.
கொக்கொக்கு   - இருமல் ஒலிக்குறிப்பு.
வாலயர்ந்த நாய் -  வாலை ஆட்டச் சக்தியில்லா நாய்.
நோய்மனை -  மருத்துவமனை-
சுருதியும் விம்மாதே -  உடல் எழுச்சி குன்றும், இசையில்
சுருதி இன்மை போல. சும்மா - எதுவும் உதவாமல் .
( நோய்வாய்ப்பட்ட அம்மாவைப் பார்க்கப்போனால்
சும்மா இருக்கமுடியாது.  சுருதி இல்லா இசையாய் அங்கு
 இருக்கலாகாது.)
இம்மியும் -  கொஞ்சமும் .  விம்மாதே  == எழாதே
வாண்டு - சிறுபிள்ளை.
கும்மாளம் - ஓடியாடித் திரிவது
குலை =  குலைதல்,  நடுக்கம்.

will review.
We have  used  fonts of only one size.  We do not know why smaller and bigger sized fonts
have appeared in the finished output. We are not able to change or ameliorate this situation.
We are sorry.

புதன், 30 மே, 2018

மாநாடு - மகாநாடு. அமைப்பும் பொருளும்.

மகாநாடு,  மாநாடு  என்ற சொல்வடிவங்கள் இப்போது
பலரும் தாளிகைகளில் கண்டு நினைவுறுத்திக்
கொள்ளுவன ஆகும்.

தமிழில் மா என்றால் பெரிய என்று பொருள். இந்த மா
என்னும் சொல்லுக்கு வேறு பொருள்களும்
உள்ளனவென்றாலும் அவை நம் இன்றைய
உரையாடலுக்குத் தொடர்புடையனவல்ல.

நாடு என்பது பல்பொருளோருசொல்.  அதாவது பல
பொருள்களையுடைய ஒருபதம்.  நாடு என்பதன்
பொருளாவன:

இடம்
உலகம்
ஊர்
பக்கம்
பூமி
தேசம்
நாட்டுப்புறம்
இடப்பரப்பு
மருதநிலம்

இவற்றுள் எதுவும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கவில்லை
. ஆனால் நாம் மாநாடு என்று  அல்லது மகாநாடு என்று
கூறினால் மக்களின் கூட்டத்தையே குறிக்கின்றோம்.

எனவே இடம். உலகம், தேசம், பூமி என்பவற்றில்  எதுவாயினும்,  ஆகுபெயராய் நின்று ஆங்குக் கூடும் மக்களைக் குறிக்கவே,   மா என்பதும் பெரிய என்று பொருள்தர,  இறுதிப்பொருளாய் வருவது:  பெரிய மக்கள் கூட்டம் என்பதே ஆகும்.

"ஊரே சொன்னது, நாமிருவரும்தாம் பொருத்தமான மணமக்கள் என்று "  என்பதாக வரும் உரையாடலில்,  ஊர் என்பது ஊர்மக்களைக் குறித்தது.  உயிருள்ளனவும் இல்லாதனவாகிய பிறவற்றையோ கட்டிடங்களையோ குறிக்கவில்லை.  வணிக வளாகம் விலையை ஏற்றியிருக்கிறது என்றால் அங்குள்ள கட்டிடம் விலையை ஏற்றவில்லை;  அதை நடத்தும் முதலாளியோ  குழும்பின் ஆட்சிக்குழுவினரோ ஏற்றிவிட்டனர் என்று பொருள்.  பெட்ரோல் ( கல்லெண்ணெய்)  விலை ஏறிவிட்டதென்றால் தானே எப்படி ஏறும்?   இது ஒரு பேச்சு வழுவமைதியாகும்.

இப்போதைக்கு இவ்வாறு புரிந்துகொள்வோம்.  மகா, மா என்பன எப்படி வந்தன, பெரிய என்ற பொருள் எப்படி ஏற்பட்டது,  மா என்ற மரத்தினாலா?
அதை இன்னோரெழுத்தில் அறிந்தின்புறுவோம். 

பிழைத்திருத்தம் பின்னர்.

திங்கள், 28 மே, 2018

தீபகற்பம்: தீவகம் அல்லாதது (முக்கரைத்தொடர்)

தமிழ்மொழிக்குரிய நிலப்பகுதி இந்தியாவின் தென்பகுதி என்று நாமறிவோம், அதிலும் ஒரு பகுதியே இப்போது தமிழ் வழங்கும் நாடு,  இதைத் தீபகற்ப இந்தியா என்று நாம் சொல்லலாம்,  இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமாகில், தீபகற்பத்தின் ஒரு பகுதி எனலாம்.

தீபகற்பம் என்ற சொல்லையும் ஆய்வோம்.

தீபகற்பம் என்ற சொல் தமிழ் அகரவரிசைகளில் இல்லை என்று தெரிகிறது.  யாம் வைத்திருக்கும் சில அகரவரிசைகளில் இல்லை. ஆனால் எம்  சமஸ்கிருத அகராதியில் அது உள்ளது.

தீபகல்பம் என்பது சமஸ்கிருதத்தில் தீவையும் குறிக்கும். முப்புறம் கடல் சூழ்ந்த தீவு அல்லாத பகுதியையும் குறிக்கும்.

ஆனால் பிராமணர் என்போர் கடல்தாண்டிப் போகக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்கின்றன.  இப்போது யாரும் இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும்  தீவுக்கும் தீபகற்பங்களுக்கும் பெயரிட்ட மிகப் பழங்காலத்தில் அவர்கள் அங்கெல்லாம் சென்றிருக்கமாட்டார்கள் என்பது தெளிவு.  தீவுபக்கம் போனால் அன்றோ அதைத் தீவு என்று பெயரிடுவார்கள்.  முப்புறம் கடல் சூழ்ந்த குமரிக்கண்டத்தினன் தமிழன் ஆதலாலும் உலகின் பல பகுதிகட்கும்  சென்றுவந்தவன் அவன் ஆதலினாலும் அவன் அதற்குப் பெயர்களை இட்டிருப்பான் என்று நாம் நன்றாக நம்பலாம்.

தீவு தீபகற்பம் முதலிய சொற்களைத் தமிழர்கள் படைத்திருந்தாலும் அவர்கள் இவற்றைப் பதிந்த நூல்கள் இல்லாதொழிந்தமையால், நாம் இவற்றைச் சங்கத நூல்களின் துணைகொண்டு கண்டுகொள்கிறோம்.

தீவு என்ற சொல் முன்னர் இங்கு விளக்கப்பட்டது.  அதனைக் காண
அன்புகூர்ந்து சொடுக்கவும்:

http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_47.html

 அதைப் படித்துவிட்டீர்கள். இப்போது தீபகற்பம் என்ற சொல்லைப் பார்ப்போம்:

தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம்.  தீவு அல்லாதது.  தீவகம் அல்லாதது.

தீவகம்+ அல் +( பு+  அம்).
அல் என்பது அல்லாதது. ( பு,  அம் விகுதிகள். )
தீவ(க + அல்) + பு + அம். :    ஓர் அம் கெட்டது,   அம் என்பது நிலைமொழியின் ஈறு,
தீவ(கல்)+பு+ அம்.  (மீண்டும் ஓர் அ  கெட்டது.)
தீவகற்பம்.
வகரம் பகரமாய்த் திரியும்.
எனவே  தீபகற்பம்.

உண்மையில் இது தீவகற்பம் என்றே இருப்பது தக்கது.

தீவக அல் பு அம் =  தீவகற்பம்  : பொருள் தீவகம் அல்லாதது,  தீவு அல்லாதது,

தீவு என்பது தீர்வு என்பதன் திரிபு அன்றோ?  ஆதலால்  "தீவக அல்லாதது" "என்றால் தீர்வாகச் சூழப்படாதது என்று பொருள் சரியாக வருகிறது.

தீவகற்பத்துக்கு இன்னும் கற்பம் ஏற்படவில்லை,  காரணம் எல்லாம் தமிழ்ச் சொற் பகுதிகளாகவும் விகுதிகளாகவும் இருப்பதால்.

தீவகற்பமென்பது உண்மையில் முக்கரை நிலத்தொடர்  ஆகும்.  தீபகற்பம் என்ற சொல் பிடிக்காதபோது இதை "முக்கரைத்தொடர்"  என்று குறிப்பிடுதல் ஏற்புடைத்தாகும்.
 

மகர வகர ஒலியுறவும் திரிபுகளும். சிறு கண்ணோட்டம்

மகரமும் வகரமும் ஒலியுறவு உடைய எழுத்துக்கள். நாம் கவிதை எழுதும்போது  முதலடியை மகரத்தில் தொடங்கி அடுத்த அடி தொடங்குவதற்கு  மகரத் தொடக்கமான இன்னொரு சொல்லைத் தேடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மகரத்தில் கிட்டவில்லையானால் வகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லுடன் இரண்டாவது அடியைத் தொடங்கலாம். மோனை வந்ததுபோலவே கேட்போருக்குத் தோன்றுமளவுக்கு இவ்வெழுத்துக்களுக்கு ஒலியுறவு இருக்கின்றது.

இம்முறை சொல்லமைப்பிலும் வந்துள்ளது.

வினவுதல்  -     மினவுதல்.   (பொருள் ஒன்றுதான்.)
விஞ்சுதல்   -     மிஞ்சுதல்.

இதன் தொடர்பில் விரட்டுதல் -  மிரட்டுதல் என்பது கவனிக்கத்தக்கது.

மிரட்டுதல் என்பது அச்சுறுத்துதல் என்ற பொருளிலே மக்களிடை அறியப்பட்டுள்ளது.   விரட்டுதல் என்பது ஓடும்படி செய்தலைக் குறிக்குமென்று நாமறிவோம்.  எனினும் இச்சொல்லுக்கு அச்சுறுத்துதல் என்ற பொருளும் உள்ளது.   ஆகவே  அந்நிலையில்  மிரட்டுதல் என்பது விரட்டுதலுக்கு ஒப்பாகிறது.

எனவே:

விரட்டுதல் -  மிரட்டுதல்.

இதற்குக் காரணம் விலங்குகளை அச்சுறுத்தியே ஓடச்செய்ய இயலும் என்பதாக
 இருத்தல் தெளிவு.

மிகுதியே  பின் விகுதி என்று திரிந்தது என்பது நாம்  முன் இடுகைகளில்
கூறியதாகும்..மி -  வி.  மிகுதி > விகுதி,


அடிக்குறிப்பு:

-------------------------------------------------

1.மால்வரை ஒழுகிய  வாழை வாழை   (   மா -  வா  )  மோனை.
சிறுபாணாற்றுப்படை.   21.

2.  -நாவொலியிலும்  வானம் என்பது மானம் என்றே வரும்.
மானம் மழை வந்தால்தானே இங்கே பயிர் விளையும் என்பர்.

மானாமாரி >  வானாமாரி என்பதும் காண்க.

3  வல் -  தமிழ்ச்சொல்.  பொருள்:  வலிமை.   மல்   வலிமை.
வல் = மல் .   வல்லன் -  மல்லன்.   வல்  + அன்  = வல்லன்  > வலன் .
வகர மகர மோனைத் திரிபு.

வல்  என்பது பல் என்றும் திரியும்.   வலம் > பலம் , (வலிமை ).

ஞாயிறு, 27 மே, 2018

விண் -- என்றுமுள்ளது இருள்.

விண் என்பதே  ஆகாயம்.  இதைப் பண்டைத் தமிழர் ஆ என்ற முன்னொட்டு இன்றிக் காயமென்றனர். இதற்குக் காரணம் எல்லோன் என்னும் சூரியன் முதல் உடுக்களுடன் நிலவுவரை  விண்ணில் காய்பவை.  காய்தல் என்றால் சூட்டில் நீர்வற்றுதல் மட்டுமன்று,  ஒளி வீசுதலும் ஆகும்.  ஒளி வீசுதலின் அது காயமெனப்பட்டது.  அது பின் காசம் என்று திரிந்தது.   இது யகர சகரத் திரிபு. இத்தகைய யகர சகரத் திரிபு தமிழில்மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணலாகும்.  புறத்தே காய்தலே  புறக் காயம் > புறக்காசம் > பிறகாசம் என்று திரிந்தது.  இன்னும் மெருகேற்றப்பட்டு பிரகாஷ் ஆனது.

விண் என்பதே திரிந்து விஷ்ணு ஆனது.  இன்றும் நீலவண்ணன், மேகவண்ணன் என்றெல்லாம் ஏத்தி ஓதப்படும் விஷ்ணு  நிறத்தால் கருமையே. எல்லும் மதியும் தோன்றாக் காலத்து விண் கருமையே.  ஆகவே இயற்கையில் கருமையே நிறமாகும். வெண்மை என்பது பகலோன் வந்து தரும் நிறமாகும். கருமையை நீலமென்பதும் பெருவழக்கு.

இருளே இயற்கையில் காணக்கிடக்கும் நிறமாதலின் நம் தெய்வங்கள் பலவும் கருமை நிறமே தம் நிறமாய்க் கொண்டன.  நம் பண்டைக் கடவுட் கொள்கையில் தெய்வங்கள் இயற்கை நிறத்தில் தோன்றுமாறு நம் முன்னோர் கவனித்துக்கொண்டனர்.

கருமை விலகத் தோன்றும் ஒளி சிவமாகும்.  சிவமெனின் செவ்வொளி.  செம்மையைச் சே என்ற ஓரெழுத்துச் சொல் உணர்த்தும். சேவடி எனின் செவ்வடி அல்லது சிவந்த அடிகள்.  சேயோன் என்பது சிவப்பு நிறத்தன் என்றும் மாயோன் என்பது கருப்பு நிறத்தன் என்று பொருள்படும்.  மா என்பது கருப்பு ஆகும்.

நமது அடிப்படைத் தேவு அல்லது தெய்வங்கள் சிவப்பும் கருப்புமாம்.

இது இயற்கை வண்ணம் பிறழாமை ஆகும்.

என்றும் இருப்பது இருள். அது ஒளி தோன்றுங்கால் விலகும்.

இருப்பது இருள். அடிப்படை.

இரு+ உள்  =  இருள் ஆகும்.  உள் என்பது தொழிற்பெயர் விகுதி.

கட > கடவுள் என்றது போலும்.

ஒட்டுதல் என்ற சொல்லின் அடி ஒள்.  அதனோடு ஒள்+ து  =  ஒட்டு என்று இணைத்து வினையானது.   ஒளி என்பது இருளொடு ஒட்டுகின்றபோது இருள் விலகி நிற்பதை உணர்வீர்.  ஆக ஒள் என்பது  பின்வந்து ஒட்டிய நிலையைத் தெரியக்காட்டும்.  இதுபின் வெளிச்சத்தையும் குறித்தது.

ஒள் >  ஒடு;  ஒள் > ஒட்டு.  ஒட்டு> ஒட்டுதல்.
இருளென்னும் அடிப்படைமேல்  வெளிச்சம் என்னும் ஒளி ஒட்டப்படுகிறது,
ஒளி மேல் ஒட்டு ஆக, இருள் உள் இருப்பதாகி  இரு+ உள்  ஆயிற்று.

இருளும் ஒளியுமே உலகு ஆகும்.  அவையே  இறைமையின் வெளிப்பாடுகள்.  

சொல்: மோகம் (மோகத்தைக் கொன்றுவிடு!)

மோகனம் என்பது இராகத்தின் பெயராகவும் இருக்கிறது.  மோகன் மோகனா என்ற பெயருள்ளவர்களும் பலருள்ளனர்.   மோகனம் என்ற பெயருள்ளவர்கூட சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றியுள்ளார். மோகம் என்ற சொல்லும் பேச்சு வழக்கில் உள்ள சொல்;  மற்றும் பாடல்களில் எதிர்கொள்வதுதான்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.

மோகத்தைக் கொன்றுவிடு ==== அல்லால் நீ என்
 மூச்சே நின்றுவிடு

என்று பாரதியார் பாடவில்லை. அவர் பாடியது வேறுமாதிரி.



பழைய நூல்களில் மோப்பு என்ற சொல் கிடைக்கிறது.  இச்சொல்லில் பு என்பது விகுதியாதலின் மோ என்பதே பகுதி என்று தமிழாசிரியர்கள் கருதியுள்ளமைக்கு  ஆதாரம் உள்ளது.  மோகம் என்ற சொல்லுக்கும் மோ என்பதே பகுதியாகும்,  மோப்பாகினேன் என்றால் மோகம் கொண்டேன்,  காதல் கொண்டேன் என்று பொருள்.

காதல்வயப்பட்டுத் திரியும் பெண்ணுக்கு "மோப்பி"  என்றும் சொல்வர். இஃது கைப்பெண்களுக்குப் பயன்படுத்தப்படும்  சொல்லாகும்.  இச்சொல்லும் தொடர்புடையதே  ஆகும்.

மோகம்:   இது தமிழ்ச்சொல்லென்று அறிந்து மகிழ்வீர்.  வகையில் இது திரிசொல் ஆகும். வாசனைபிடித்தல் என்னும் பொருளினின்று திரிந்து காதல் என்ற பொருளுக்குச் சென்றுவிட்டபடியால் திரிசொல் ஆவது இது.

மோகினி என்பது மோயினி என்றும் திரியும்.

பிழைகள் தோன்றின் பின் திருத்தம்பெறும்.

சனி, 26 மே, 2018

சேகரித்தல் சேமி இரு; பாயிரம் ஆயிரம் : விளக்கம்

சேகரித்தல் என்பதொ ஒரு பேச்சு வழக்குச் சொல்.  தொல்காப்பிய முனிவர் தம் ஒப்பரிய இலக்கணத்தைத் தமிழ் மொழிக்கு இயற்றிய காலத்திலே  எழுதப்பெற்றிருந்த  ஓலைச்சுவடி நூல்களையும் வழக்கையும் ஆராய்ந்து பின்னர் தொடங்கியதாகவே பாயிரம் கூறுகிறது.

பா என்னும் பாட்டினால் இயற்றப்பட்டது.  நூலின் முனனே முதல் பாடலாக அல்லது தொடக்கப்பாட்டாக வைக்கப்பட்டது. நூலைப்பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூறுவது. இது நாம் சுருக்கமாகக் கூறுவது ஆகும். பாயிரம் - சொல் எப்படி அமைந்தது?   

பா =  -பாட்டு.
இரு =  நூலில் முன்னிருக்க வைக்கப்படுவது.
அம் =  விகுதி.

பா+  இரு + அம் =  பாயிரம்.

இப்படி இரு என்ற பலபொருட் சொல் பல சொற்களில் தோன்றுவதை முன்னர் விளக்கியுள்ளேன்.  எடுத்துக்காட்டாக  ஆயிரம் என்ற சொல்:

ஆ =   மிகுந்த.  கூடுதலான.    ஒன்று ஆகப் பெரியது என்றால் மிகவும் பெரியது என்று சொல்வதான பேச்சுவழக்க்

இரு =  பெரிய.

இருள்சேர் இருவினை என்ற குறள் தொடரில் இரு என்பது பெரிய என்று பொருடரும்.  ஈண்டும் அஃதே பொருளாம்.

அம் = இறுதிநிலை அல்லது விகுதி.

எல்லம் கூட்டினால்:  ஆ+  இரு+ அம் =  ஆயிரம்.  அப்போது அது ஆகப் பெரிய எண்.  இப்போது சிறியதே.  மலேசியாவில் மூன்று டிரில்லியன்  அரசுப் பணம் கொள்ளை போய்விட்டதென் கிறார்கள்.  ஆயிரம் இன்று பெரிதன்று.  சொல்லமைப்பில் அது பெரிது. இன்றைச் சுற்றமைப்பில் குட்டிதான்.

இரு என்பதுபோலும் சொற்கள் சொல்லமைப்பில் பயன்பட்டுள்ளன.

சில சொற்கள் நெல்வயல்களில் உழைத்தோரால் உருவாக்கப்பட்டவை.
அவற்றுள் சேமித்தல் சேகரித்தல் என்பவை கவனிக்கத்தக்க மேன்மை உடையவை.

சேர் + மி =  சேர்மித்தல்.  

இது வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல்  உருவாக்கும் பொதுமக்களின் திறமை. சொல்லிக்கொடுத்ததை மட்டும் படித்த புலவனுக்குப்
புரியாத திறமை.  இது மொழிக்கு உதவியுள்ளது.

தமிழ் என்பது மக்கள் மொழி.

சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று வீழ்ந்து சேமித்தல் என்றானது.  சேர்த்தலும் சேமித்தலும் ஒன்றானாலும் நுண்பொருள் வேறுபாடு உடையவை.  சேமிப்பு வங்கி என்னும்போது இச்சொல் நன் கு பயன்படுகிறது.  சேர்ப்பு வங்கி என்றால் சிறக்கவில்லை.

சேகரித்தல்:   இது சேர் + கு + அரி  + தல்.

இங்கும் ரகர ஒற்று வீழும்.  முதற்சொல் சே என்று ஆகும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல். இங்கு சொல்லிடைநிலையாகப் பயன்பட்டது.

அரித்தலாவது  தன்னருகில் வரும்படியாக இழுத்தல்.  அருகு > அரு> அரி.
இதில் குவிகுதி வினையாக்கச் சொல்லமைப்பு.  இந்தக் கு தேவையில்லை.  ஆகவே  அரு என்பதை மட்டும் கொண்டு, ஓர் இ வினையாக்க விகுதி சேர்த்து
அரி என்ற சொல் படைக்கப்பட்டது.  அரு  இ!   என்றால் பக்கத்தில் வா என்று வாக்கியமாகும் .

சேகரி என்பதில் இந்த   அரி பயன்பட்டது.

இன்னொரு நாள் சந்திப்போம்.