வியாழன், 15 மே, 2025

ஆகம என்பது இடைக்குறைந்து ஆம எனவாவது: ஆமநாயம்.

ஞாயம்  என்ற சொல்,  நியாயம் என்பதன் திரிபாக எண்ணப்படுகிறது.  ஆனால் ஞாயம் மேலும் திரிந்து நாயம் என்று எழுதப்பட்டால்,  அவை மரபுகளுக்கு இணங்காத பட்டி வழக்கு என்று எண்ணத் தோன்றும்.  ஆனால் இதைப் பாருங்கள்:

வினைச்சொல்:  நயத்தல்.  தொடர்புள்ள பெயர்ச்சொல்:  நயம்.

நய + அம் >  நாயம். இங்கு  முதனிலை நீண்டு திரிந்து  அம் விகுதி பெற்றது. அம் என்பது அமைப்புக் குறிக்கும் விகுதி. விகுதிகட்குப் பொருள் இல்லாமலும் சொல்லை மட்டும் அமைக்க வருவதுமுண்டு.  ஆனால் இங்குப் பொருள் காண முடிகின்றது.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

வினைச்சொல்:  மயங்கு-(தல்.)

அடிச்சொல்:  மய.   கு என்பது வினையாக்க விகுதி.

மய + அம் > மாயம்.   

கண்டோரை மயங்கச் செய்வது.  ( இதுவோ?  அதுவோ? என்று.

மாய்தல் ( அறிவை மாய்த்தல் ) என்பதாலும்  மாய்+ அம் > மாயம் என்று வரும் என்பதால்,  இஃது இருபிறப்பி அல்லது பல்பிறப்பி  ஆகும்.

மய என்பது மாயம் என்று வரலாகும் என்பதை இது காட்டுவதால்,  நயம் என்றபாலதும் நாயம்  என்று திரிதலுமாகும் என்று உணர்க.

இனி,  ஆகம என்ற சொல்லும்  ஆம என்ற திரிந்தது.  ஆனால் இது தனியே வராமல் நாயம் என்பதனோடுதான் வரும்.  அப்போது ஆகம நாயம் அல்லது ஆகம ஞாயம் என்று கொள்ளவேண்டும்.

இவற்றை நன் கு கற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கும் தெரிவியுங்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை: