தொந்தரவு என்பது ஒரு திரிபுச் சொல். சிலவேளைகளில் எது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. முன் சென்மத்தில் அல்லது பிறவியில் நடைபெற்று முடிந்த தீவினைப் பயன்கள் மீண்டு வந்து தொந்தரவு செய்வதாக இருக்கலாம். எதனால் தொந்தரவு என்று கடுமையாகச் சிந்திப்பதானால் ஏதும் பயன் விளைந்துவிடாது. காரணம் கருத்தில் கோளாறு என்பதன்று, எதனாலென்றாலும் வருவது வந்துகொண்டுதான் இருக்கும். இனி அடுத்த சென்மத்தில் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ள முனையலாமே தவிர பண்டைப் பயன்களை மாற்றி அமைக்கும் திறன் குறைவுதான். காலத்தைப் பின்னோக்கித் தள்ள இயல்வதில்லை. நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து எதுவும் விளைவதில்லை. நீங்கள் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் நடப்பவை நடக்கும்.
தொல் என்றால் பழையவை. தரவு என்றால் தருதல், அதனால் மீண்டும் வருதல், அல்லது அலையடித்தல். தொ+ தரவு > தொந்தரவு.
நிம்மதி என்பது, நில் > நி, நின்று போவது. மன்னுதல் என்பது நிலைகொள்ளுதல். மன்னுவதால் நின்று போனவை மீண்டும் தொடங்காமல் இருத்தல். திரும்பாமை என்பதற்கு தி என்று போட்டால் நிம்மதி என்ற சொல் வந்துவிடும். இந்தச் சொல்லும் வாக்கியங்களி லிருந்து குறுகி அமைந்த சொல். நின்று போனவை மன்னுதலும் மறுபடி திரும்பாமையுமும் ஆகும்.
வாக்கியங்களிலிருந்து குறுக்கி அமைக்கப்பட்ட சொல் நிம்மதி, நில் என்பதில் லகர ஒற்று மறைந்து நி என்று நின்றால் அது கடைக்குறை என்று இலக்கணம் சொல்லும். இதனுடன் மன்னுதல், திரும்பாமை முதலியன வந்து நிம்மதி என்ற சொல் ஆகிறது.
சொற்கள் பல மனிதன் உருவாக்கியவை. அந்த அறிவினை மனிதனுக்குக் கடவுள் கொடுத்துவிட்ட காரணத்தால் கடவுள் பின்னணியில் இருந்துள்ளார். அவனன்றி அணுவும் அசையாது என்பதால் அவ்வாறு எடுத்துக்கொள்வதற்குக் காரணம் உள்ளது. நீர் எதை நம்புவதாலும் நம்பாமையினாலும் எதுவும் உலகில் மாறிவிடாது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
உங்கள் அன்பான கவனத்திற்கு
YOUR ATTENTION PLEASE
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post..
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக