திங்கள், 7 ஜூன், 2021

எழுதுகோல் பெயர்கள்: தூவி , குன்றிக்கோல்.

 எழுதுகோலுக்குத் தமிழ்ப் பெயர்கள் சில காட்டப்பெற்ற இடுகையை நீங்கள் இங்குப் படித்திருப்பீர்கள்.  அதை இன்னொரு முறை வாசித்துக்கொள்ளலாம்.

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_30.html

எழுதுகோலுக்கு இன்னொரு பெயரும் உண்டு.  அதுதான் "தூவி"  என்பது.   தூவி என்ற சொல் இறகு என்றும் பொருள்படும்.  சிலகாலம் சிலர் எழுதுகோலைத் தூவி என்றும் குறித்ததுண்டு.

சித்திரம் அல்லது ஓவியம் வரைவதற்குப் பயன்படுத்தும் கோலை  ஓவியத் தூவி எனலாம் என்று நினைக்கின்றோம். இதைத் தூரிகை என்பது பெரும்பான்மை.

வரைதல் என்பது எழுதுவதைக் குறித்தாலும்,  ஓவியம் வரைதலையும் குறிக்கும். எனவே  வரைகோல் என்பது இருவகை வேலைகளையும் செய்வதற்குரிய கோலின் பொதுப்பெயர் என்று தெரிகிறது.

"சாக்" என்பது இன்னும் கிடைக்கிறது.   அதை மாக்கோல் என்று கூறலாம்.

குன்றி என்ற சொல் பல சொற்களில் பயன்பாடு கண்டுள்ளது.  அவற்றை எல்லாம் இங்குத் திரட்டிக் கூறுவதற்கில்லை.   இது நண்டுக் கண்ணையும் குறிப்பது.  சிறிய பந்துபோல் வெளியில் வந்து காண உதவுகிறது. பின்னர் உள்ளே பதிந்துகொள்ளும்.  இச்சொல் (குன்றி)  குஞ்சி என்றும் திரியும்.  கரிய ஒரு பருப்புவகை கருங்குன்றி ( துவரைக் குன்றி) எனவும் சுட்டப்படும். சங்க இலக்கியமான  குறிஞ்சிப் பாட்டிலும் வந்துள்ளது  ( 72).  இவற்றைக் கருத்தில் கொண்டு "பால்பென்"  என்பதைக் குன்றிக்கோல் என்றும் குறித்தல் பொருந்தும்.  குன்றிமணி (குண்டுமணி) என்பதும் கருதுக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


கருத்துகள் இல்லை: