ஞாயிறு, 20 ஜூன், 2021

நம் இனிய நேயர்கள்

 உழையென் றுழைத்தோர் இடுகைமுன் வைத்துப்

பிழையொன் றிருந்தாலும் பேசார்----- குழைவின்றி

நம்நேயர் சென்றிடுவார் நன்றல சுட்டாரே

எம்நாளும் செல்லும் இனிது. 


உழையென் றுழைத்து -  கடினமாக வேலைசெய்து;

இடுகை முன் வைத்து -  ஓர் இடுகையை வெளியிட்டு;

பிழையொன் றிருந்தாலும் =   பிழை ஒன்றோ காணப்பட்டாலும்;

பேசார் -  தம்முள் அதுபற்றிப் பேசிக்கொள்ள*  மாட்டார்கள்

குழைவின்றி  -  மன வருத்தம் இல்லாமல்;

நம் நேயர் சென்றிடுவார் -   நம்  வலைத்தள அன்பர்கள் போய்விடுவார்கள்;

நன்றல -  அப்பிழைகளை;

சுட்டாரே - எழுதியவரிடம்  எடுத்துக்காட்ட மாட்டார்கள்:

எம் நாளும் - எங்கள் காலமும் 

இனிது செல்லும்-   கசப்பு இல்லாமல்  போகும்.

( பின்  என்றாவது அதைக் கண்டு திடுக்கிட்டுத் திருத்துவோம் )

என்றபடி

மெய்ப்பு பின்னர்.

* இந்தக் குறியிட்ட பதங்கள் அழிக்கப்பட்டு,

கண்டு மீண்டும் புகுத்தப்பட்டன. 21062021   1033

Remarks: Hacked . restored 

கருத்துகள் இல்லை: