திங்கள், 12 ஜூன், 2017

கல்லெறி கலகரை

கல்லெறி  கலகரைக் கட்டிப் போடுதல்
காலம் காணாத குற்றமோ?
கல்லடி பட்டவர் பற்பலர் வீழ்வதைச்
சொல்லிப் புகழ்வதும் திட்டமோ?
சொல்லெறி வாளர்கள் நல்லதைக் கண்டிடச்
சொல்படைத் தலைவரைத் திட்டுமோ?
வல்லடி செய்தவர் தம்மை அடக்குதல்
மன்பதை நேயமாய்ப் பட்டதே.

கருத்துகள் இல்லை: