வியாழன், 1 ஜூன், 2017

கோயில் பூசைகளும் மக்கள் சாமிகும்பிடுவதும்,



இது எப்போதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான்.
இதைப்பற்றி என்ன‌ உரையாட இருக்கிறது என்று
எண்ணலாம். ஒருவரே போய் ஓர் அர்ச்சனைச் சீட்டைக்
கட்டணம் செலுத்தி வாங்கிப் பூசாரியிடம் கொடுத்து சாமி
கும்பிட்டுவிட்டு வந்தால் இடர்ப்பாடு எதுவும் ஏற்படாது.
பழ அர்ச்சனை என்றால் அதற்குள்ள கட்டணத்துக்குச்
சீட்டு வாங்கிக்கொள்வோம். தேங்காய் அர்ச்சனை என்றால்
அதற்கான கட்டணத்தைச் செலுத்திச் சீட்டுவாங்கிக்கொண்டு
பூசாரியைப் பார்ப்போம். ஆனால் விளக்குப்பூசை. சுமங்கலிப்
பூசை என்றெல்லாம் வரும்போது கோவிலார் பெரிய
கட்டணங்களை விதிக்கிறார்கள். உதாரணமாக ஒரு 
சுமங்கலிப் பூசை செய்யவேண்டுமென்றால் பத்தாயிரம்
வெள்ளிகள் (டாலர்கள் ) வரைகூட கோயில் பட்டியல்
போட்டுக் கட்டணமாக‌ வாங்கிக்கொள்கிறது.இவையன்றி
உபயதாரிகளும் பூ மாலை அலங்காரம் வாழைமரம்
தோரணங்கள்,   பங்கு கொண்டோருக்கு நினைவுப்
பரிசுகள்   என்று தனிச்செலவும் செய்கிறார்களாம் ;
பூசை முடிந்தபிறகு கோயில் சிப்பந்திகளுக்கும் வேட்டி
துண்டு கையில் ஒரு தொகை என்று கணக்கில் 
வராத செலவுகளும் செய்யப்படுதல் காணலாம்.. இந்தச் சிப்பந்திகளுக்கெல்லாம் கோயிலார் சம்பளம்
கொடுத்தாலும் தட்சிணை என்னும் தக்க இணையான
செலவுகளைச் செய்யாவிட்டால் அடுத்தமுறை
எதிலாவது காலைவாரி விட்டுவிடுவார்களோ
என்ற அச்சம் வேறு இருக்கிறதாம்.

அப்புறம் சாமிகளுக்குச் சாத்திய புடவை வேட்டி
துண்டுகளெல்லாம் எங்கே போய்விடுகின்றன என்பது
ஆய்வுக்குரிய விடயமாமவும் உள்ளதுஇப்படிப் பலர்
சேர்ந்து ஓர் உபயம் நடத்தி, அந்தச் செலவுகளைப்
பகிர்ந்துகொண்டூ கோயில் கட்டணமும் செலுத்தி,
கோயிலார் செய்யாமல் விட்ட காரியங்களுக்கும்
ஆன எல்லாச் செலவுகளையும் பார்த்துக்கொள்கிறார்கள்.

இவ் விரிந்த பூசைகளில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம்.
அவர்களுக்குப் பூசையில் பங்கு பெறுவதும் அன்னதானமும் (
அவர்களுக்குக் )  கட்டணமின்றிக் கிடைக்கிறது.  

ஒரு சாப்பாட்டுக்கு எட்டரை அல்லது ஒன்பது வெள்ளி
வீதம் உபயம் செய்கிறவர்கள் கோயிலுக்குக் கட்டிவிடுகிறார்கள்.
அதனாலே  பொதுமக்கட்குக் செலவில்லாமல் போகிறது .  இதிலும் குழப்படிகள் உண்டு. 300 பேருக்குக் காசு கட்டி 200 பேருக்கே
உணவு கிடைத்த‌ நிகழ்வுகளும் உள்ளனவாக‌த்  தெரிகிறது.


பூசையின்போது சாமிக்குச் சிலர் தாலிச்சங்கிலி, தாலி,
 காதணிகள், காப்பு என விலையுள்ள பலவற்றைத்
தானமாக வழங்குவதுமுண்டு, பெரும்பாலும் இவர்கள்
உபயதாரர்கள். இது கோயிலின் காசாளரிடம்
செலுத்தப்படாமல் பூசையின்போது அணிவிக்கப்படுவதால்,
அவற்றுக்குப் பெற்றுக்கொண்டதற்கான சீட்டுகள் யாதும்
சில கோயில்களில் வழங்கப்படுவதில்லை. எங்கள் பொக்கிடப்
பெட்டியில் வைத்திருப்போம் என்கிறார்கள்.  சிலகாலத்தின்
பின் இவற்றின் நிலை யாருமறியார்.

கோயிலாரே இத்தகைய உபயங்களை எடுத்துச் செய்யலாம்
கட்டணங்களை நேரடியாகப் பெற்று வருமானத்தைப்
பெருக்கிக்கொள்ளலாம் என்றாலும் தனியார்போல்
கூட்டத்தைச் சேர்க்கக் கோயில்களால் முடியாமற்
போகலாம். ----பகிர்ந்து செய்யும் பூசைகளில் பலரையும்
இணைக்கும் பாலமாக தன்னார்வமுடைய ஒருவரோ
இருவரோ இருப்பர். மற்றவர்கள் இவர்களின்
செல்வாக்குக்காகவோ நட்புக்காகவோ உறவுக்காகவோ
இறைப்பற்று பலன் கொடுத்து உயர்ந்து நிற்பதுபோல்
காணப்படுவதாலோ இன்ன பிற உணரப்பட்ட
நன்மைகளாலோ பங்குபற்றிப் பகிர்ந்து கொள்வோராவர்.
இந்தத் தன்னார்வப் பற்றரின் இடத்தை கோயில்களால்
நிறைவு செய்தல் இயலாது.

ஐயப்ப தெரிசனத்துக்குப் பல தனிக்குழுக்கள் செலவுகளைப்
பகிர்ந்துகொண்டு சபரிமலை வரை செல்கிறார்கள். பற்றர்கள்
வரும்போது செலுத்தும் காணிக்கைக்குப் பெற்றுக்கொள்ளப்
படும் கட்டணத்தைத் தவிரமற்ற எல்லா வரவு செலவுகளையும்
கோயில் உடையவர்கள் நிறுவாகம் செய்வது
இயலாத வேலை ஆகும்.

ஒரு பற்றன் அல்லது ஒரு குழுவினர் கோயிலுக்குச்
சென்று கட்டணம் செலுத்திச் சாமி கும்பிடுவது,
சட்டப்படி ஒப்பந்த அடிப்படையிலானது  ஆகும்.
பற்றனோ பற்றர்களோ விலை கொடுத்துச் சேவையைப் பெறுகிறார்கள்.அவ்வளவுதான்.

கோயில் பூசைகளும் மக்கள் சாமிகும்பிடுவதும்,

Will edit
message receoved"  An error occurred while trying to save or publish your post. Please try again



கருத்துகள் இல்லை: