வியாழன், 29 ஜூன், 2017

தோது என்ற சொல்லை ...........

இன்று தோது என்ற சொல்லை அணுகுவோம்.

" இன்றைக்கு எப்படி?அவரைப் பார்த்துப் பேச முடியுமா? அவருக்கு எப்படித் தோது என்று தெரியவில்லையே!"

இப்படிப்  பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

தோது எனற்பாலது ஒரு தொடர்புக்கான வசதியைக் குறிக்கிறது.  தோதில்லை என்றால், அத் தொடர்பில்
ஈடுபடத் தருணமில்லை என்று பொருள்படும்.

தோது என்பது தோய் என்ற  வினையுடன், து என்னும் விகுதி சேர்ந்தது.  விகுதி சேர. யகர ஒற்று மறைகிறது.

தோய் >  தோய்து >  தோது.

இது பெருவரவினது அன்றோ?

இப்போது யகர ஒற்று மறைந்த சில சொற்களை நினைவு
கூர்வோம்.

தோய்+சை =  தோய்சை >  தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.
உய் + (த்) + தி =  உய்த்தி >  உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி>  வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) +  இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
பெய் + தி =  பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ  நோ :   தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி =  வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.

எல்லாம் பட்டியலிட நேரமில்லை. படிக்க உங்களுக்கும்
நேரம் கிட்டுவது கடினம்.

கருத்துகள் இல்லை: