ஞாயிறு, 28 மே, 2017

நேற்றுளார் இன்றோ இல்லை,

நேற்றுளார்  இன்றோ இல்லை,
நினைவினில் மட்டும் உள்ளார்!
கூற்றிலே பேரைக் கேட்டோம்
கூடிட வாய்ப்பே இல்லை!
ஆற்றிலே ஓடும் வெள்ளம்
அதுதனில் மூழ்கி மாய்ந்தார்!
ஈற்றிலே சென்று வீழ்தல்
இயல்பினுக் கென்ன செய்வோம்!

விளக்கம்:

கூற்றிலே ‍~  பிறர் கூறுதலிலிருந்து;
கூடிட ~ மீண்டும் கூடிப் பேச;
ஈற்றிலே ~  இறுதியிலே;
இயல்பினுக்கு ~  இயல்பு ஆகும்; அதற்கு....



Please note that our  internet postings are actively being blocked.
Please wait until current blocking activities cease.

கருத்துகள் இல்லை: