சனி, 6 மே, 2017

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.


நிருபயா உச்சநீதி மன்ற வழக்கில்
அருமையாய்த் தீர்ப்பு வழங்கினர் நன்றுநன்று.
கற்பழித்துக் கொன்ற இரண்டிரு பேருக்கும்
பிற்பகலில் தூக்கென்றார் பேதமில்லாச் சாதனையே!
கொள்ளை கொலைகற் பழிப்பினைப் போன்றவை
எள்ளளவும் ஏற்றுக் கொளவியலாக் குற்றங்கள்.
குற்றமொன்றும் செய்யாது கூனின்றிப் பேருந்தில்
பற்றியேறிச் செல்பயணி பால்பாய்ந்த பாழ்ங்கையர்
உள்குடலைப் பேர்த்தனர் ஓரிரக்கம் இல்லாமல்
பல்கடல் சூழ்நாட்டி லும்பதைக்கப் பாவிகள்!
குற்றமே கொய்த முறைமன்று முற்றும்நம் 

கைதட்டைப் பெற்றதே காண்.  

There is an inherent alignment error.
Will edit  and try later.




இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

கருத்துகள் இல்லை: