சனி, 6 மே, 2017

பாரியை

பார் என்பது இவ்வுலகைக் குறிக்கிறது.இவ்வுலகில், கணவனென்பானுடன் இணைந்து 
வாழ்வு நடாத்துபவளே பாரியை. இங்கு இரு சொற்கள் கோவைப்பட்டு நிற்கின்றன.
ஒன்று பார். மற்றொன்று: இயை என்பது. இதன்பொருள் இயைதல், அதாவது 
 இணைதல் என்பதாம்.

மனைவி என்பவள் வீட்டுக்காரி என்று பொருளுணர்ந்து
கொள்ளப்படுவாளாயின், ஒப்பிடுங்கால் பாரியை என்று
குறிப்பிடப்படுபவள், பாரெங்கும் அவனுடன் இயைந்து
வாழ்பவள் ஆவாள். இச்சொல்லால் காட்டப்படுவது எல்லையில்லா
 உறவு ஆகும்.

இச்சொல் வேறு மொழிகட்கும் தாவி வழங்குவது இச்சொல்லின் விரிபொருளையும் திறத்தையும்

உணர்த்துகிறது

கருத்துகள் இல்லை: