புதன், 17 மே, 2017

காசு என்பது காக்கப்படுவது.

விரும்பாத எதனையும் எந்த மனிதனும் காத்து வைத்துக்கொள்ளுதலில்
ஈடுபடான்.  ஓர் ஆடவன் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி அவளைத்
தன்வயம் வைத்துக்கொள்ளவிரும்புகிறான். அதுவே காதல். இங்கு
வினைப்பகுதி யாவது "கா" என்பதே. அப்பெண் அவனைக் கவர்கிறாள்.
கா > கவ, கவ+ அர் = கவர். கா என்பது கவ் என்று திரியும். கவ் > கவ்வு. ஒன்றைக் காத்து எடுத்துக்கொள்வதாய் இருந்தால், இருபக்கமும்
நெருங்கி வந்து பொருளை அகப்படுத்தவேண்டும். அதைத்தான் எலும்பைக் கவ்வுகையில் நாய் பூனைகளெல்லாம் வாயால் செய்கின்றன.
கவை, கவடு என்ற சொற்கள் பலவற்றையும் விளக்கலாம் என்றாலும்
நம் இருவருக்கும் நேரம் போதாது.  காமம் என்பதும் கா> காம் > காமுறு என்பதும் காம் > காமம் என்பதும் இந்தக்காவில் வளர்ந்த‌
தமிழ்ப்பூக்களே. அறியார் பிறமொழி என்று அலமருவர்.


இவற்றை எல்லாம் முன்னரே இணைய தளங்களில் எழுதியதுண்டு.
அங்குக் கண்டின்புற்றிருப்பீர். இப்போது காசு என்பதை மட்டும்
ஆராய்வோம். மிக எளிமையான தமிழ்ச்சொல்.

வெண்பாவின் இறுதிச்சீர் காசு என்னும் வாய்பாட்டிலும் முடிவதுண்டு.
காசு என்பது மிகப் பழையசொல்.

காசு என்பது காக்கப்படுவது. அதனாலே அது சு விகுதி பெற்று காசு
ஆயிற்று, காசுக்கும் காதலுக்கும் நமது நூல்கள் தொடர்பு காட்டமாட்டா.  ஆனால் சொல்லமைப்பில் இரண்டும்    கா - ‍ காத்தல்
என்னும் அடியாகப் பிறந்த சொற்களே.

தலைப்பு: காசு என்பது காக்கப்படுவது.


கருத்துகள் இல்லை: