புதன், 20 அக்டோபர், 2010

மழைத்துளிகள் பட்டதனால் Rain and nature


மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு
மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி
அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே
அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம்
இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும்
என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக்
குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும்
கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில்.

கருத்துகள் இல்லை: