வெள்ளி, 22 அக்டோபர், 2010

தாயன்றி யார்?

தாயன்றி யார்?


பிறர்தயை இல்லாநற் பெற்றியில் வாழ
குறைமயல் இல்லாத குட்டி -- நிறைவளர்ச்சி
நேரிற் பெறவேண்டும், நேடவிது கற்பிக்கப்
பாரிதனில் தாயன்றி யார்?

பெற்றி = தன்மை; குறை மயல் =அறிவுமயக்கமாகிய குறை.; அல்லது குறையும் மயக்கமும். நேரில் பெறவேண்டும் = பல இன்னல்களையடைந்து அறிந்துகொள்ளாமல், நேரடியாய்த் தாயிடமிருந்து கற்றுகொள்ளவேண்டும். நேட = சிந்தித்தால் .


நிறைவளர்ச்சி = உடல் வளர்ச்சி மட்டுமின்றிப் பிற வளர்ச்சியையும் குறிக்கிறது.

கருத்துகள் இல்லை: