புதன், 20 அக்டோபர், 2010

ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!

கரும்பினிலும் கரடியிலும் உயிரை வைத்தாய்
கருத்தாக அவைதமக்கு வளர்ச்சி வைத்தாய்
எறும்புமுதல் உலகினில்வாழ் உயிர்களெல்லாம்
ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!

உட்கொள்வோன் ஓருடம்பை உண்டபின்னே
ஒன்றொழியப் பிறிதுவளர் மாயை செய்தாய்!
கட்புலனுக் கொழிந்துவிட்ட உருவும்பின்பு
காட்சிதர மீண்டுவராக் காலம்கண்டாய்!

போர்செய்து பல்லுயிரை அழிக்கவெண்ணும்
புலைமைதனை நிலைமையென விடுத்ததென்ன,
ஏர் உய்தி பெற்றுலகில் அறமும் ஓங்க
ஏற்றவழி நின்றுதவ இணங்கிவாராய்

கருத்துகள் இல்லை: