திங்கள், 5 டிசம்பர், 2022

கார்த்திகைத் தீபம்

 தீபம் மறுமலர்ச்சி,                                                                                                                      தேனினிய மீள்சுழற்சி,                                                                                                            காவந்துக் கனிவளர்ச்சி,                                                                                                    கல்லுருகும் தமிழுணர்ச்சி                                                                                                கார்த்திகை இறைநிகழ்ச்சி                                                                                              காலமெல்லாம் நம்புகழ்ச்சி.


கார்த்திகைத் தீபம் என்றால் அண்ணாமலையார்க்கும் மிக்கச் சிறப்புகள் மகிழுறுமாறு நடைபெறும்.  இந்தக் காலக் கட்டத்தில் ஒரு வாழ்த்தைத் தெரிவித்தலும் மிகுசிறப்புத் தருவதே ஆகும்.  எமக்கு அன்பர் ஒருவர் வாழ்த்துத் தெரிவித்தார்.  அவர்க்கு யாமெழுதிய பதிலெழுத்து,  எழுதுகோல் சென்றபடி வரைவுகண்டது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இதற்குப் பொருள் ஏதுமுண்டா என்று வினவுங்கள். பொருள் சொல்லத் தெரிந்தவன் எதற்கும் ஒரு பொருள் சொல்வான்.  தெரியாதவனுக்குப் பொருளிருந்தாலும் ஒன்றும் தோன்றுவதில்லை. உலகம் அவ்வாறானதே ஆகும். உங்களுக்குத் தோன்றும் பொருளை நீங்கள் மேலெடுத்து உரைகொள்க. 

கருத்துகள் இல்லை: