திங்கள், 4 ஏப்ரல், 2022

நாளை வருக நற்கவி

உங்களுடன் உரையாடும் கவிதை:


சென்றமுந்   நாளும்தாம் செந்தமிழில் சிந்தித்து

வந்தமுந்  நற்கவிதை நான் தரவே  ---- முந்திடினும்

ஆங்கெனை முந்தி  அயர்வு முடக்கியதால்

நான்கிடந்  தின்றெழுந்  தேன்.


இனிநேரம் நன்றாயின் யானே எழுத

நனிமுயல்வேன் நம்பி  வருவீர் ---- கனிபயந்த

சாறாய் அவைவருமே சற்றும் தயங்காமல்

நேராய் வருவீரே இங்கு.


சென்ற முந் நாளும் -  சென்ற மூன்று நாட்களும்

வந்த முந்நற் கவிதை -   தோன்றிய நல்ல மூன்று கவிதைகள்

நனி -  நன்கு

கனி பயந்த சாறு ---  கனிச்சாறு  போல

நேராய் - எதற்கும் தயங்காமல்.  வேறு எங்கும் செல்லாமல்

இங்கு --  இந்த வலைப்பதிவுக்கு

நன்றி வணக்கம்

மெய்ப்பு பின்

பிறழ்வுகள் காணின் பின்னூட்டம் செய்யுங்கள்>

கருத்துகள் இல்லை: