ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

க ண்ணாடியிற் கண்டெடுத்த கவி

 முகம்தவிர வெளியுருவைக் காட்டும் ஆனால்

மிகுமுருவும் அதிற்காட்டிச்  சார்பும்காட்டும்! 

மனிதன் கண்ட பொருள்களிலே மாப்பொருள் என்றால்

தனிமேன்மை கொண்டதுகண் ணாடி என்போம்

மகிழ்கொள்ளக் கவிபாடத் தமிழே   போல

முகிழ்த்துவரும் கருத்துகளை  முன்சொரி கின்ற

உலகமொழி  ஒன்றிரண்டு  உண்டே  என்பேன்

எலாம்தந்த  இப்படமும் களிப்பீர் கண்டே.




படத்தில் தோன்றுபவர்:  அ.மா. மணி

கவிதை தந்தவர்:  சிவமாலா.

படத்துடன் கவிதை சுவைத்துமகிழ்வீர்/

கருத்துகள் இல்லை: