திங்கள், 4 ஏப்ரல், 2022

பாரதம் > பாரத்

 பாரதம் என்ற சொல். எவ்வாறு வந்ததென்பதைச் சுருங்கச் சொல்வோம். மிக்க விரிவாக வரையப்பட்ட  நூல்கள் படித்து முடிக்கப்பெறுவது பெரும்பாலோர்க்கு இயலாதது.

கடலும் வானும் மிக்கப் பரப்பு உடையவை

பரவை என்ற தமிழ்ச்சொல்லுக்கு பரந்ததான கடல் என்பது பொருள்.

மிகப் பரந்த இடத்தில் எங்கும் இருப்பவன் கடவுள். அதனால் அவன் பர+ ம் + அன்.

ம் என்பது இடைநிலை.  இது உம் என்பதன் குறுக்கம்.

பாரதம் :  பர + அது + அம் >  பாரதம்.  இது பின் அயற்றிரிபாக பாரதம் என்று நீண்டு திரிந்தது.  இது பரதவர் என்ற சொல்லின் உறவு.

பர > பாரதம்:  இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர். பரத்தல் என்ற

 வினையிலிருந்து அமைந்த சொல்.

பர + அது + அ + அர் > பரதவர்.  வகரம் உடம்படுமெய்.

மீன்விலைப் பரதவர் என்ற இலக்கிய வழக்கை நோக்குக.  மீனவர் என்று பொருள்>

மூன்று புறமும் கடல்.  வடக்கில் மலைகளிலிருந்து நீர்வரத்து.  மீனுக்குப் பஞ்சமில்லை. இந்த மீன் நாகரிகம் இந்தியாவில் செழித்திருந்தது.

பாரத் என்பது வால்வெட்டுச் சொல். (  சொல்லியல் முறையில் சொன்னால் புரிதல் குறைவு.)

எம் பழைய இடுகைகளில் மேலும் சொற்களை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க.


மெய்ப்ப்ய் பின் 

கருத்துகள் இல்லை: