சனி, 18 அக்டோபர், 2014

எழுதிக்கொண் டிருக்கலாமென் றால்..........



எழுதிக்கொண் டிருக்கலாமென் றால்முளைத்த வேலைகளோ
பழுதிற்கொண் டிருத்தியதே பண்ணுறுமென் நோக்கினையே!
முழுதிற்செம் பகுதியென முன்கிடைத்த நேரமின்றோ
உழுதல்செய் துணவுண்ணான் போல்தொலைந்து போனதுவே.

இன்னும்சின்  னாட்களுக்கே  இதுதொடரும் போலுளதால்
எண்ணும்நன்  னாள்தன்னில் எழுதவிய லாதெனினும்
கண்ணும்பொன் காதுமனம் கணம‌னைத்தும் செந்தமிழை
ஒண்ணும்போ தெல்லாமும்  கருதுவதில் ஓய்ந்திலவே 

கருத்துகள் இல்லை: