ஞாயிறு, 26 அக்டோபர், 2014

தும்பை : தானை மறம்

தும்பைத்  திணையில்  புலவர்  ஒரு வேந்தனின் படைப்பலத்தைப்  புகழ்ந்துரைப்பார்.  அதே பாடலில் பகை அரசானது வலிமையின்மைக்கும் அவனை நோக்கி வந்துகொண்டிருக்கும் தோல்விக்கும் அதனால் ஏற்படும்  கேட்டிற்கும் மனம் .இரங்குவார்  .

இதைக் கூறும் துறைக்குத்  "தானைமறம் "  என்று குறிப்பர் இலக்கணியர்.

(தன்னிகர் இல்லாத் தானை மறமே )
வேற்றானை மறங்கூறி 
மாற்றார் அழிபு  இரங்கினும்
ஆற்றின் உணரின்
அத்துறை  ஆகும். 
(ஓம்படுத்த உயர்பு கூறின்று.)  

இது கொளு. பிறைக்கோட்டினுள் உள்ளவை வேறு பாடலின்று தருவிக்கப் பட்டவை.

உயர்பு மட்டும் கூறினும் துறை அதுவாம்.

உருள் பெருந்தேர் ! வெல்லும் குதிரைகள்!  தலை சிறந்த மத யானைகள்!  வீரமிக்க மன்னனும் படை வீரர்களும்.  இந்தப் படையை வெல்ல வேறு உண்டோ  என்று பாடினால் .........தும்பைத் திணை ; தானை மறம் என்னும் துறை.

இப்பொருள் பற்றிய புறப் பாடல் வரின் கண்டின்புறுக. 



கருத்துகள் இல்லை: