திங்கள், 18 பிப்ரவரி, 2013

கணினிக் கோளாறு சமாளிக்கும் முறை


கணிணியில் கோளாறினால் சில வேளைகளில் நாமேழுதுவது தொலைந்துவிடுகிறது! இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  இந்த வெண்பாக்கள் தோன்றின.



தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.

(பொருள்:  தான்தொலையா நிற்றலுறும்  -  தான் தொலையாமல் நிற்கும். விட்டச்சம்  - அச்சம் விட்டு என்று முறைமாற்றிப் பொருள்கொள்க.  )

திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.

(இது இணையதளத்தில் அதைப்படித்தவர்கள் வைத்திருந்தால் தந்துதவும்படி  வேண்டுகிறது.
 ஆங்கு = அங்கு ;  ஈங்கு = இங்கு 
உறுத்தி உளைச்சல் உளத்தே -   உளத்தே  உளைச்சல் உறுத்தி  என்று முறைமாற்றுக, )



கருத்துகள் இல்லை: