ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

தத்தித் தொடரும்,,,,,,

  இது  ஒரு கவிக்கு உற்சாகமூட்ட எழுதியது. 28.11.11.


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்.

கருத்துகள் இல்லை: