புதன், 20 பிப்ரவரி, 2013

சின்னஞ்சிறு கிளிகள்

சின்னஞ்  சிறுகிளிகள்   சீரும்  அழகேதான்
 பன்னிவரும்  சொல்லசைகள்  தாமும்  பயிலமுதே
தின்னவொரு வண்பழமாம் தேனாம் மயங்காமல்
உண்ணப்பே ரூற்றாம் உரை

இது சிறுபிள்ளைகள் பற்றியது

அசை   சீர்    தளை  முதலியவற்றைக்  பாவலர்கள்  பாட்டெழுதும்போது  கவனித்துச்  சுவைத்து  எழுதுவர் .  ஆனால்   சின்னப் பிள்ளைகளின்  பேச்சிலே இவையெல்லாம்  உள்ளன,  அவர்களின் பேச்சில் வரும்   சீர்களும் அழகுதான். அவர்கள்  பன்னிப் பன்னிப்  பேசுகையில் வரும் அசைகளும் பயிலும் அமுதமே, பழம், தேன் . நீரூற்று  என்பவையெல்லாம் அவர்களிடம் பேசுகையில்  காணலாம் .  எத்துணை  இனிமை !!    




கருத்துகள் இல்லை: