விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,

வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.