மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்குக் கத்திக் குத்தா?



நீர்தருக என்றார்க்கு நீரைத் தந்தார்.
நீர் குடித்து நன்றிசொன்ன நிமையம் அந்தோ
கூர்நெடிய கத்திதனை குறித்து நீட்டிக்
கும்பிகலங் கிடவொருத்தன் குத்தினானே!
பார்வைதடு மாறுகின்ற முதியோர் கண்டு
பாய்ந்தோட முடியாத காலோர் பாங்கில்
நேரிரங்கும் நெஞ்சிலையோ திருட்டுக் கும்பல்
நிகழ்த்தியதை நினைத்தாலே பதைக்கும் நெஞ்சம்.

செய்தி: மலேசிய நண்பன் 8.12.2012.

நிமையம் = நிமிடம்.