புதன், 24 டிசம்பர், 2008

தமிழும் கடமையும்



(கலித்தாழிசை)





ஒவ்வொரு காலையும்
ஒருமணி நேரம்
ஆகிலும் தமிழ்நூல் ஓதிடுவீர்;
எவ்வழி செல்வ
தாயினும் ஒருபுத்
தகமே கொண்டு
செல்லுதல் அதுகடமை! 1

படிப்ப தனைத்தும்
பைந்தமிழ் ஆக
பார்த்துப் படிக்க முனைந்திடுவீர்!
துடிப்பது நெஞ்சம்
அனைத்தும் தமிழ்தமிழ்
என்றே துடித்திடப்
பார்ப்பீர் அதுகடமை! 2

பிறமொழி கற்றுப்
பெரும்பயன் கொள்வீர்
பேதைமை யாமே அவைவெறுத்தல்.
திருமொழி தமிழே.
திசைபல செல்லினும்
இருத்துவிர் மார்பினுள்
தமிழை அதுகடமை! 3

ஆக்கிய நாள்



post Jan 22 2008,

கருத்துகள் இல்லை: