செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஒருதலைக் காதல் ஒழிக.

ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க:

"எவரறிவார் யான்கொண்ட அன்புன்மேல் இங்கே
எதையறிவார் என்பற்றி ஏனோ் --- இவையொன்றும்
மானிடர் தானறியார் மாறாதுன் மேல்கொணர்ந்த
வானருட் காதலிறை வா."

என்று ஒரு வெண்பாவாக்கிவிடலாம். ஒருதலைக் காதல் இறைக்காதல் ஆகிறது.

"மானிடர் தானறியார் மாதவனுன் மீதிசைந்த
வானருட் காதலிறை வா."

எனினுமாம்.
ஒருதலைக் காதல் பாடலில் வரவேண்டும் என்றால்:

"மானிடர் தானறியார் மாறாதே ஓர்தலையாய்
யானிடர்க் காதல் படும்."

இலக்கியங்கள் பழித்த ஒருதலைக் காமம் ஒழிக.

கருத்துகள் இல்லை: