வெள்ளி, 12 டிசம்பர், 2008

இன்பகாலம் இனி வருமோ?

வாழ்வதற் கேற்ற சூழல்கள் அமைந்த
கூடும் ஒவ்வொரு குருவிக்கு முண்டாம்;
வாடிய காலம் இருப்பினும் இன்பம்
கூடிய காலமும் வந்திடும் அன்றோ?
ஏற்ற இறக்கம் இயல்பே வாழ்வினில்!
ஆற்ற இனிதாய்த் தொடருதல் அரிதே.
குமுறிய கடலால் குமரி மூழ்கித்
தமிழ்நிலம் சுருங்கிய கால முதலாய்
இழந்தவை பற்பல; இனித்தவை பற்பல.
இன்ப காலம் இனிவரும்; துன்பமும்
தொலைந்திடும் அந்நாள் எந்நாள்?
அலைதுயர் இலாது தமிழர் வாழவே!

கருத்துகள் இல்லை: