புதன், 24 டிசம்பர், 2008

ஞாயம் மாட்டுக்குக்

ஆசிய சோதியும் ஆனவர் பின்சென்ற
அன்புள்ள மக்கள்் ் இலங்கையிலே-- அவர்
பேசிய பேச்சுக்கில் லைமதிப் பேகுண்டு
வீசினர் கொன்றனர்  மாடுகளை!!

மாந்தரும் மண்ணொடு மண்ணாய் அழிந்ததை
எண்ணி உகுத்திடக் கண்ணீரிலை! -- அங்கு
போந்தயெண் பத்தைந்து மாட்டுக்கும் கண்ணீரை
வாங்கிட வேணுமே போய்இரவல்.

ஆட்டுக்குக் காட்டிய ஈவிரக் கம்பெரு
மாட்டுக்கும் மாதவன் காட்டவில்லை -- எனப்
பாட்டுக்குக் கொண்டுபோய் மாட்டின் முதுகினில்
பாய்ச்சினர் வான்குண்டு பாருங்களே!

கருத்துகள் இல்லை: