புதன், 24 டிசம்பர், 2008

"வெற்றுப்பாடலை" வெண்பாவாக்கும் கலை......!

[ சீரும் தளையுமில்லாப் பாடல்கள் சில, நன்றாகவே இருக்கக் காணலாம். அவற்றின் கருத்தோட்டத்தைச் சிதைத்துச் சொற்களையும் மாற்றி "வெண்பா" ஆக்கிவிட்டால்..... அதைப்பற்றியது இந்தப் பாடல்]

சீரும் தளைமற்றும் சேராக் கவிதைக்குள்
ஊறும் அழகை உருக்குலைத்து --- வாருமே
வெண்பா விளைந்திடக் காண்போம்; வெளிறிய
மண்பாவா னாலும் மதி.

கருத்துகள் இல்லை: