சனி, 20 டிசம்பர், 2008

இயற்கை தந்த கவி செயற்கையில் பதிவு பெற்றது.

மெல்லிய பூங்காற்றிலே --- என்
மேனி சிலிர்த்திடுதே!
அல்லி மலர்திடுதே ! -- நில
வழகொளி வீசிடுதே,

அணிபெறு வண்டினங்கள் -- சேர்ந்து
அருகே முரல்பொழுதில்,
இனிமை தவழ்கவிதை -- என்
நெஞ்சில் முகிழ்க்கிறதே.

மங்கிய தண்மதியில்் -- இங்ஙன்்
மாந்திக் கிடக்கையிலே,
தங்கிடும் கோலெழுத்தை -- வரை
தந்திடத் தருணமுண்டோ?

உள்ளில் ஊறியதை -- அங்கே
உள்ளப் பலகையிலே,
தெள்ளத் தெளிவுறவே -- வைக்கத்்்
தேங்கின எண்ணங்களே.்

மகிழ்வினை என்சொல்லுவேன் -- என்
மனைக்குள் புகுந்ததுமே,
அகழ்ந்துடன் ஆய்ந்துமனம் -- கண்டு
அக்கவி தான் தொடுத்தேன்.

இயற்கைக்கு நன்றிசொல்வேன் - கவி
இயன்றதோர் ஊற்றதனால்!
செயற்கை மறப்பதுண்டோ --- புனை
செய்த மனைவளர்க!

கருத்துகள் இல்லை: