வியாழன், 15 மார்ச், 2018

தகனம்.



தகனம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

தகத்தக என்பது எரிதல் ஒளிவீசுதல் என்பவற்றின் குறிப்பு.

தக என்பதனோடு அனல் என்பதையும் எடுத்துக்கொள்க.

அனல் என்பதில் அன என்பதை எடுத்துக்கொண்டால்:

தக+ அன.=  தகன என்றாகும்.

அம் விகுதி புணர்த்துக.

தகனம் ஆகிறது.                   

இது ஒரு புனைவுச்சொல் ஆகும்.

இதை அழகாகவே புனைந்துள்ளனர்  பண்டையர்.

புதன், 14 மார்ச், 2018

உண்மை பொய்

கடற்கடியில் கிடக்கின்ற மீனே நானே
கடல்தொடங்கும் இடம்யாதோ கழறு வாயே!

கிடக்கின்ற இடம்தானே கடல்தொ  டங்கும்;
மடக்காமல் மறைக்காமல் விடையே சொல்வாய்.

கரைப்புறத்து நின்றபடி உரைப்பாய் நீயும்;
கடல்நிற்கும் இடந்தனிலே தொடங்கு மென்பாய்.

உரைப்பதெது வானாலும் குறைப்பக் கூட்ட
முறைப்படுமோ சிறைப்படுமோ உண்மை தானே.

(கிறுக்கியபடி வந்த கவி)










ர்

தீரம் தீவு கரை



தீர் (வினை):  தீரம், தீவு முதலிய.

நிலத்தின் வழியாக ஒரு கடற்கரைக்குப் புறப்பட்ட ஒருவன்  அங்கு போய்ச் சேர்ந்தவுடன்,  நிலம் தீர்ந்து கடல் தொடங்குதலைக் காண்கிறான். கடல் கரையிலிருந்தே தொடங்குவதாக அவனுக்குத் தெரிகிறது. கடல் தொடங்கிய இடத்தில்தான் நிலமும் முடிகிறது.  ஆகவே  கரையை அவன் “தீரம்” என்பது மிக்கப் பொருத்தமான சொல்லமைப்பு ஆகும்.

உலகில் முன்னாளில் கடலைப் பார்க்காமலே செத்துப்போனவர்கள் பலர்.  கடலை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று போய்க் கடலைக் கண்டு இறும்பூது எய்தியோரும் பலர். அந்த நீரில் கொஞ்சம் குளித்துவிடலாம் என்று இறங்கி மூழ்கி இறந்தோர் பலர். கடல் கரையை அரித்து நிலப்பகுதியைக் குறுக்குகிறது என்பதைச் சிங்கப்பூரில் அறிந்துகொண்டு  கடலுக்கு நல்ல கரையை அமைத்து,  கரைக்குக் காரையிட்டுக் கரையையும் பாதுகாத்தனர்.  கரை, கரை, கரை!  கரைந்து குறைந்து போவதை உடையதே கரை ஆயிற்று.
ஆற்றின் நிலப்பகுதி தீருமிடம் தீரம்.
அது கரையுமிடம் கரை.

  தீரம் என்பது தீரும் இடமால்
தீராக் கரையாய்த் தீர்ப்பது கடனே.

சுற்றிலும் கரையாய், தீரமாய் இருந்துவிட்டால்,  நிலம் அத்துடன் தீர்ந்துவிட்டது என்று பொருள். கடலடியிலும் நிலம் இருந்தாலும் அதை நிலமென்று வாங்க யாரும் எனக்குத் தெரிந்தவர்கள் அடித்துக்கொள்ளவில்லை.  சீனா எனின் தென்சீனக் கடலிலும் ஒரு தீவினை உண்டாக்கும் வல்லமை படைத்த நாடாம்.

சுற்றிலும் முற்றிலும் நிலம்  தீர்ந்துவிட்ட ஓரிடத்தைத்  தீர்வு என்று குறித்தது தீர புத்தியே ஆகும்.  அது இயற்கைத் தீர்வு.  பின் இடைக்குறைந்து தீவு ஆயினது தீர்வே ஆகும் தில்லுமுல்லு அன்று.

தீர்  > தீர்வு > தீவு.  (   இடைக்குறை).

தீரம் ஓர் அழகிய சொல்லே.  இல்லாவிட்டால்  கபீர்தாஸ் ஏன் அதை இட்டுப்
பாடுகிறார்:

“மந்தஸ மீரே ஏ ஜமுனா தீரே!!”

மனிதர்களில் சிலர் உலகச்சேவை செய்கிறார்கள். சிலர் நாட்டுச் சேவை புரிகிறார்கள். இன்னும் சிலரோவெனின் வீட்டுச்சேவையில் வியன் திறன் விளைக்கின்றனர்.  சொற்களும் விலக்கல்லவே விதி இதற்கு.

Please do not pronounce thIram and thIvu as dhIram and
dhIvu when speaking Tamil. 




ஆக்கின்ஸ் அறிவியலறிஞர் மறைவு.

அறிவியலார் ஆக்கின்சும் அகிலம் நீத்தார்.
நீத்தலின்முன் யாத்தநூல்கள் அறிவூற்றுக்கள்.
தெரிவியலால் தேர்ந்தபலர் சூழ்ந்து போற்றித்
திறம்கண்டு சிரம்தாழ்ந்தே அறிவைப் பெற்றார்.
உருவுடைய உலகம்வான் வெளியென் றெல்லாம்
ஓவாதிவ் வுலகிற்கு யாதென் றாய்ந்து
நிறைவுறவே போதித்த ஆசான் சென்றார்
நெஞ்சார இரங்கலுமே விஞ்ச லேச்சே.

http://www.bbc.com/news/world-43395807 

செவ்வாய், 13 மார்ச், 2018

உடும்புக்கறி கேட்டாளோ தலைவி?



ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் .....................(275)
 

இறையனார் அகப்பொருள் உதாரணப் பாடல்.

 கன்றே அமையும் என்றது:  கன்றைத் தலைமகள் உண்ணும்பொருட்டுத் தலைவன் தந்துசென்றான் என்று கொள்வதாயின், வந்தவன் அமையும் என்று சொன்னது, தலைமகளுக்கு வேறு உணவுகளும் வேண்டும் என்று கேட்டதுபோலவும் ஆனால் கன்றை மட்டும் உண்க; அது உனக்குப் போதும் என்று அமைதிப்படுத்துவது போலவும் வருகிறது. இது பாடலை முற்றும் கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.   தலைவி வீட்டினர் யாவரும் சாப்பாட்டுத் தடியர்களா என்ன? மாட்டுக்கறி உண்பவர்களா? வேறு உடும்புக்கறியும் வேண்டுமென்றாளோ தலைவி?

இதுவா பிரிவுத் துன்பத்தை வெளிப்படுத்தும் விதம்?

 கன்று  உணவுக்குத் தரப்படவில்லை என்பது தெளிவு.

திங்கள், 12 மார்ச், 2018

தின்னத்தந்த கன்று...............

சென்றே ஒழிக  வயலணி ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் கல்வேண்டா .....................(275)

இறையனார் அகப்பொருளிலிருந்து  ஓர்  உதாரணப்1 பாடல்.

இந்தப் பாடல், பரத்தையிடம் போதற்குப் பிரிந்த தலைமகன்
பற்றியது என்ப‌. அவன் போய்விட்டாலும் அவனுக்காகத் தலைமகளிடம் பேச, ஒருவன் வருகிறான். அவன் யாரென்பது, பாட்டிலிருந்து வெளிப்படையாகத் தெரியவில்லை.அவன் தலைமகளிடம்
பேசியதாக வருகிறது இந்தப் பாடல்.


சென்றே ஒழிக வயலணி  (ஊரன்):    அழகான வயல்கள் நிறைந்த ஊரை உடைய‌ அந்தத் தலைவன்   போனால் போகட்டுமே! (அப்படி உங்களை விட்டு
எங்கே போய்விடப் போகிறான் என்பது)

ஒழிக என்பது இத்தகு பிரிவினை, தொடரலாகாது என்பதன் குறிப்பாகும்.

வயல் அணி (ஊரன்) சென்றே ஒழிக என்று மாற்றுக.  எது ஒழிக எனின் பிரிதல் ஒழிக; ஊரன் சென்றுவிட்டான் என்பது.  சென்றே என்பதிலுள்ள ஏகாரமும் இறந்த காலமும் இதையே வலியுறுத்துவதாகிறது.  வயலணி என்பது ஆகுபெயராய் ஊரனைக் குறிக்கும்.

அடுத்து ஊரனும் என்று உம்மை தோன்ற அவன் குறிக்கப்பெறுகிறான்.

ஊரனும்   தின்னத்தந்த கன்றே அமையும் :  புல், பிண்ணாக்கு முதலிய
தீனிகள் அளித்துக் கொண்டிருக்கிறானே, உங்கள் கன்றுகட்கு!
உங்கள் வீட்டின் பாலுள்ள அன்பையும் கவனிப்பையும் அவன்
மறந்துவிடவில்லை என்பதை, இந்த அவன் செய்கை
காட்டுகிறதே. புல் பிண்ணாக்கு தவிடு முதலிய தின்னத்தந்த கன்றுகள் சான்றாய் அமையும் என்றபடி.

தின்னத் தந்த என்பது:  கன்றுகள் தின்னும்படியாக அவன் தந்தான் என்பது.
அவை ( அல்லது அது)  தின்றன;  (அவன்) தந்தான்:  இங்கு எழுவாய்கள் தொக்கு.


இந்த ஊரன் (தலைவன்) உயிர்கள் மேல் அன்புடையவன். வந்தபோதெல்லாம்
கன்றுகளுக்குத் தீனி போட்டு நல்லருளாளனாய்த் திகழ்ந்தான். கன்றுகள்பால் இத்துணை அன்பு காட்டியவன் வந்துவிடுவான் என்பது குறிப்பு.  ஒழிக என்றதும் பிரிதல் ஒழிக என்பதையே வலியுறுத்துகிறது.

மேலும் இங்கு கன்று என்றது  தென்னங்கன்று பனங்கன்றுகளைக் குறிக்கமாட்டா. அவை எதையும் தின்னமாட்டா; அவற்றையும் நேரடி உணவாக மனிதர் கொள்வதில்லை.

தின்னத்தந்து அகன்றே அமையும் என்பது பொருந்தவில்லை.  முன் உன்னுடன் இருக்கும்போது உனக்குத் தீனி அளித்தபின்,  " அகன்றே அமையும் " என்றால், விட்டுப்போனதே சரி என்று கூறுவதுபோலாகும்; அஃது ஒழிக என்ற கருத்துக்கு மாறாகிறது.  தலைவிக்குத் தின்னத்தருவதில் உள்ள பெரிய விடயமென்ன என்பதையும் விளக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. தலைவியின் வீட்டில் சோறில்லையோ?

தலைவி அவனின் அன்புக்கு ஏங்குகிறாள்;   உணவுக்கு அன்று.  இதனாலும் கன்றை  உண்ணுதல் என்னும் கருத்து, பொருந்தவில்லை.

தின்னுதல் என்றால் வருந்துதல் என்றும் பொருள் உள்ளது.  வருந்தும்படியான சூழ்நிலையை உண்டாக்கி அப்புறம்தான் எல்லாம் சரியாகும், வருவான் என்பது தலைவன் கல்நெஞ்சன் என்று பொருள்தருவதால் அதுவும் பொருந்தவில்லை.

சென்றே ஒழிக என்று சொல்லிவிட்டு அகன்றே அமையும் எனின் இதைச் சொல்ல ஒருவன் வரவேண்டுமோ?  என்ன ஆறுதல் அது?  மேலும் கூறியது கூறலாகிறதே!

யாம் கூறிய பொருளே பொருந்துகிறது.  கன்றுகள்பாலும் அன்போடு பழகியவன்; வருவான் என்பது.

இங்கு கல்வேண்டா என்று புலவர் சுருக்கமாகக் கூறுகிறார்.  இந்தப் பிரிவுக்காகக் கல்லறைக்குள் போய்விடாதே என்பது அவர் கூறவந்தது.
இதற்கு நடுகல் இல்லையாதலால் இறப்பதில் ஒரு வீரமும் இல்லை என்பது
குறிப்பு எனலாம். கல் என்பது கல்லறை என்பதன் கடைக்குறையாய்க் கொள்ளலாம்,  இதிலோர் வீரமில்லை, யாரும் நினைவு கூரத்தக்க செயலாகாது என்பது வந்தோன் வழங்கிய ஆலோசனை.  நல்லதோர் அறிவுரை.

வேலையாய்ப் போயிருக்கிறார், அன்புடையவர், வந்துவிடுவார், கவலை
வேண்டாம் என்பதே செய்தி, இப்பாடலில்.

இளமாடுகளைத் தந்து அவற்றை தலைவியும் தலைவனும் தின்றார்கள் என்பது கேட்க அருவருப்பாக இல்லை? இப்படியா பொருள் சொல்வது? தின்னத்தந்த = தீனி ஊட்டிய (கன்றுகள்).

இங்கு ஊரனும் தின்னத்தந்த  =  ஊரனும் ஊட்டி வளர்த்த (கன்றுகள்).

(ஊரன் )  சென்றே ஒழிக!
ஊரனும் தின்னத்தந்த (ஊட்டிவளர்த்த ) கன்று(ஓன்றோ பலவோ).

ஊரனும் என்றதால் பிறரும் ஊட்டுவதுண்டு என்பது பொருள். எப்படியும் கன்றுகள் தீனியைப் பெற்றுக்கொண்டுவிடுகின்றன;  தலைவியே அவனன்பை இழந்தவளாய் நிற்கிறாள் என்று தெளிவாக்குகிறது, ஊரனும் என்ற உம்மை.

தின்னத்தந்த :  தீனி கொடுத்த; தீவனம் கொடுத்த.

தின்னுதல் - என்றதால் கன்றை மனிதர் உண்ணுதலைக் குறிக்கவில்லை. தின்னுதல் என்பது கன்று முதலியன தீனி தின்னுதல்.  உண்ணுதல் என்பது மாந்தர் உண்ணுதல். இந்த வேறுபாட்டையும்  அறிக.

விடுபட்ட சொற்களை வழங்கிப் பொருள்கூறுக. இது நல்ல பாடலாகவே தோன்றுகிறது. நயமுள்ள பாடல்.

பயில்தொறும் நூல்நயம்..............!

We have edited this post in order to bring out  its best. Hope
you enjoy it.

Will review.





அடிக்குறிப்புகள்:

----------------------------------------------------------

வெட்சிதானே குறிஞ்சியது புறனே 


1

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று
இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே. 


(தொல்காப்பியம், புறத்திணையியல் 5)

தொல்காப்பியம்  சில துறைகளை வெட்சித்
திணையில் கூறுகிறது. 

யாருக்கு நடுகல் வழிபாடு  உரியது
என்பது கூறப்பட்டுள்ளது. இத்தலைவி இறந்தால்
அத்தகு சிறப்புகள் யாதுமில்லை என்பது 
குறிப்பு என்று கொள்ளலாம்.

பிற்காலத்தில் (பாடலெழுந்த காலத்தில் ) இந்த
விதிகள் எத்தகு இறுக்கத்துடன் பின்பற்றப்பட்டன?

குடும்பத்தார் மட்டும் சென்று வழிபட அடையாளக்
கற்கள் வைக்கப்பட்டன என்றும் கொள்ளலாம். அவை
நட்டகற்கள் தாம் எனினும் பிறர்வந்து வழிபாடு செய்யும்
சொல்லிய நடுகற்கள் அல்ல என்றும் கொள்ளலாம்.

பாடல் கல்வேண்டா என்று மட்டும் சொல்கிறது.
இதற்காகச் சாகவேண்டாம் என்பதே புலவன் இப்பாடலில்
சொல்வதாகும் என்று கொள்வதே பொருந்தும்.
நடுகல் ஒன்றும் இல்லை என்றும் குறிப்பாக எடுத்துரைக்கலாம்.

"பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்" என்ற
தொடரிலும் நடு என்பது இல்லை.



ஞாயிறு, 11 மார்ச், 2018

நானூறு

நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும் 
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப் 
பானயிவை யாவும் கலந்து!! 

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத் 
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்லதமிழ்  வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம் 
வெல்க உலகில் தமிழ். -

[சிவமாலா ]- ...

யாம் உணர்வுகள் களத்திற் சென்று பல கவிதைகளை
எழுதி வெளியிட்டிருந்தாலும் அவை அக்களம் திடீரென்று
மூடப்பட்டதால் மீளா அழிவில் சிக்குண்டு மூழ்கின. 
அதிலொன்றுமட்டும் தப்பித் தவறிக் கிட்டுவ தாகிறது. 
இணையத்தில் இன்னும் கிடைக்கிறது. அதனை
 ஈண்டு பதிந்துள்ளோம்.

கவிதைத் திரிகள் தொடங்கிக் கவி எழுதும் ஆர்வத்தைத்
தூண்டுமுகத்தான் யாம் பல எழுதினோம். அவை இப்போது
மீட்புறாதழிந்தன.

இக்களம் தொடங்கிய இருவரிடை மனவேறுபாடுகள்
முகிழ்த்ததும் களத்தைப் பின்னர் அவர்களுள் ஒருவர் 
மேற்கொண்டதும்  அதைக் கணினி விளையாட்டுகள்
மையமாக மாற்றியமைத்து  எழுதப்பட்ட அனைத்தையும்
கிட்டாமற் செய்ததும் நடந்த நிகழ்வுகள்.

பல ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கு எம்மால் 
எழுதப்பெற்று வெளிவந்தன.

இதன்பின் பிறர்தொடங்கும் களங்களிற் சென்று
எழுதுவதை விடுத்தோம்.

 இவை 2005க்கு முன்னதாக எழுதியவாய் 
இருக்கக்கூடும்.

பல் கள்ள மென்பொருள்களால் இங்கும் பல 
அழிந்தன. மிச்சமிருப்பவை உங்கள் வாசிப்புக்கு.



நூலெழுதி வெளியிடலாம் என்ற ஆலோசனை 
முன்வைக்கப்பட்டது. இதற்குச் செலவு அதிகம்.
பகிர்வு முயற்சிகளும் செய்தல் வேண்டும். அதனால்
மேற்கொள்ளவில்லை.

பணம் பண்ணுவது நோக்கமன்று. அது நோக்கமாயின்
ஆங்கிலத்திலோ மலாய் மொழியிலோ எழுதவேண்டும்.
முன்ஷி அப்துல்லாவைப்போல் புகழ்பெற முயலலாம்!

நூல்வாசிப்போர் தொகை மிகக் குறைவு. அவை
சென்றடையும் தொலைவும் விரிவற்றது.  
வணக்கம்.

ஐம்பூதம், பூதம் ஆகியவை



பூதம் என்ற சொல்லை முன்போர் இடுகையில் விளக்கியது நினைவிலுள்ளது.  அதை இங்கு மீண்டும் விளக்குவோம்.

பூதம் என்பது தோற்றம் என்றே அடிப்படைப் பொருளைத் தரும்.
பூத்தல்  என்பதற்குப் பல பொருள் உள்ளன வென்றாலும்,  அவற்றுள் தோன்றுதல் என்பது மொன்றாகும்.

பூ (வினைச்சொல்).

பூ+ து + அம் = பூதம் என அமையும்.
நிலம், தீ, விசும்பு.  நீர், வளி (காற்று)  என்பன ஐம்பூதங்கள்.

விசும்பு என்பதில் செங்கதிர், நிலவு, உடுக்கள் என்னும் நட்சத்திரங்கள் , ஆகாயம் எனப்படும் வெட்டவெளி என யாவும் அடங்கும்.

பூ > பூ+து+ அம் > பூத்தம் , இது இடைக்குறைந்து  பூதம் என்றாம் எனினும் விளைவு ஒன்றே.

பூமி என்ற சொல்லும் பூத்தல் என்பதனடிப் பிறந்தது.  இது முன்னர் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது.  அங்குக் காண்க.

சொல்லமைப்பில் பகுதியும் சொல்லீறும் இருவகையாகவும் புணரும். அதனைப் பின் வரும் உதாரணத்தால் அறிந்துகொள்க.

அறு + அம் =  அறம்.  ( வரையறுக்கப்பட்ட விதிகள் என்பது பொருள்).

அறு+ அம் =  அற்றம்.  ( அறுத்தமைந்ததுபோன்ற சரியான நேரம்).
ஒன்றில் றகரம் இரட்டித்தது; ஒன்றில் இரட்டிக்கவில்லை.  இரண்டு சொற்கள் உருவாக்கப்பட்டு இருவேறு பொருள்களில் வழக்குக்கு வந்தன.  தமிழ்மொழியில் சொல்லாக்கம் இத்தகையது.

பூத்தம் என்ற ஒரு தனிச்சொல்லையும் அமைத்து வேறொரு பொருளுக்குப் பெயராய் இடலாம்.  அப்போது இன்னொரு சொல் கிடைக்கும்.  இனி வேண்டுமானால் ஒரு சொல்லைப் படைத்துக்கொள்ளலாம், தேவைக்கேற்ப.

சொற்களுக்கு ஏற்படும் தேவைகளைச் சமாளிக்கத் தமிழில் போதுமான வசதிகள் உள்ளபடியால், கடன்வாங்கத் தேவையில்லை. ஆராய்ந்து அமைத்துக்கொள்ளலாம்.

இனி, பூ+த் +அம் = பூதம் என விளக்கி, த் என்பது சொல்லமைப்பில் ஓர் இடைநிலை எனினும்  விளைவு ஒன்றே ஆகும்.

தோற்றங்கள் ஐந்து ஆதலின் பூதங்கள் ஐந்து  எனப்படும்:  ஐம்பூதம்.

பிறப்பு+ அஞ்சு+ அம் =  பிறப்பஞ்சம் > பிரபஞ்சம் என்பதும் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது.

சொற்களை அமைப்பதில் விளையாடியிருக்கிறார்கள். நீங்களும் நீக்குப்போக்காகவே நின்று கண்டுபிடிக்கலாம்.  சொல்லமைப்புக்கு விதிகள் சிலவே.  விதிகள் என்பதினும் இவற்றை வழிகள் என்று கொள்வதே மதிநுட்பம் ஆகும்.

மக்கள் அமைத்த சொல்லாயின் இலக்கணம் பேசவேண்டியதில்லை. பின்பற்றிப் பயன்படுத்த வேண்டியதுதான்.  வல்லெழுத்து மிக வேண்டுமா வேண்டாமா என்பதொன்றும் மக்கள் கவலையன்று.  குறிக்க ஒரு சொல் வேண்டும். மற்றவை தள்ளுபடி.

இனிப் புதிதாக உங்கள்முன் தோன்றும் உருவும்  பூதம்தான்.  பூ என்பதே பகுதி.

பூ >  பூது > புது.
பூ > புது > புத்தி.  ( அறிவில் தோன்றுவது).   பூ+ தி = பூத்தி. முதனிலை குறுகி “புத்தி.” இருவகையிலும் சரிதான். இதைப் பிறமொழிகளும் பெற்றது நமது மொழித்திறம்.

பூ> பூமி  முன்னர் சொல்லப்பட்டது.

எல்லாம் தோன்றற் கருத்து,   அறிக மகிழ்க.

தமிழே மூலம்.

பிழைகள் மறு ஆய்வில் கவனிக்கப்பெறும்.