அன்னையும் தந்தையும்
This song was rendered by M K Thyagaraja Bhagavathar in the film "Haridass"
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
பல சுவைக் கவிதைகளில் இப்போது ஓர் அழகிய இனிய பாடலைப் பதிவுசெய்வோம். இப்பாடலை எழுதிய கவிஞர் , இசைமேதை பாப நாசம் சிவன் என்று அறிகிறோம்.
அன்னையும் தந்தையும் தானே --- பாரில்
அண்டசரா சரம் கண்கண்ட தெய்வம்;
தாயினும் கோயிலிங் கேது -- ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திரமேது;
சேயின் கடன் அன்னை தொண்டு -- புண்ணிய
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலமும் இதிலுண்டு!
தாயுடன் தந்தையின் பாதம் --- என்றும்
தலை வணங் காதவன் நாள்தவறாமல்
கோயிலில் சென்றென்ன காண்பான் --- நந்த
கோபாலன் வேண்டும் வரம்தருவானோ?
பொன்னுடன் ஒண்பொருள் பூமி ---- பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வு,
அன்னை பிதாவின்றி ஏது -- மரம்
ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது
விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,
வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.
பச்சையாக நடத்தல், பச்சையாகப் பேசுதல்.
பச்சை, பாசி, பாசம் (பாசம் பிடித்திருப்பது). பாசிலை, பச்சூன், பச்சிலை, பச்சோலை, பச்சைப்பெருமாள், பச்செனல், பாசிமணி, பாசிப்பயறு, பசுத்தல், பைங்கிளி, பசுங்கிளி, பசும்பால் (பச்சைப் பால்), பசலை -- என்று பச்சை குறிக்கும் அல்லது நிறத்தோடு தொடர்புகொண்ட சொற்கள் பல
பகரத் தொடக்கத்துச் சொல், பா என்று நீண்டும், பசு-, பை- என்று திரிந்தும் நிற்பதை மேலே கண்டுகொள்ளலாம்.
இடக்கரானவற்றைப் பேசுங்கால், அவற்றை அடக்கிப் பேசாதவன், "பச்சையாகப் பேசுகிறான்" என்பது வழக்கு.
பாசம் என்பது பச்சை குறித்தது.
இனி, பாசம் என்பது ஆபாசம் என்று ஆகாரம் பெற்று பச்சையாகப் பேசுதலை, அல்லது நடந்துகொள்ளுதலைக் குறிக்கும்.
தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது, ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.
ஆகாயம் - காயம் ஆவது.
ஆபாசம் - இடக்கரடக்கல் இல்லாதது. பச்சை ஆவது.
ஆபாசம் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள், அனார்ய, அசப்த என்பன.
மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்குக் கத்திக் குத்தா?
நீர்தருக என்றார்க்கு நீரைத் தந்தார்.
நீர் குடித்து நன்றிசொன்ன நிமையம் அந்தோ
கூர்நெடிய கத்திதனை குறித்து நீட்டிக்
கும்பிகலங் கிடவொருத்தன் குத்தினானே!
பார்வைதடு மாறுகின்ற முதியோர் கண்டு
பாய்ந்தோட முடியாத காலோர் பாங்கில்
நேரிரங்கும் நெஞ்சிலையோ திருட்டுக் கும்பல்
நிகழ்த்தியதை நினைத்தாலே பதைக்கும் நெஞ்சம்.
செய்தி: மலேசிய நண்பன் 8.12.2012.
நிமையம் = நிமிடம்.
இஸ்லாமின் முன்கலை ஈடில் பொருள்கள்
இசைவாகக் காட்சிக்கே இட்டார் --திசைதோறும்
யாவரும் கண்டின் புறுமா றதுகண்டு
நாவரும் பாட நலம்.
http://www.voanews.com/content/saudi...d/1555885.html
வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.
குசும்பு = குறும்பு.
விரும்பி மேல்செலுத்துவதே விண்ணப்பம். இதில் உள்ள விண் என்ற சொல்லைக் கவனிப்போம்.