வெள்ளி, 19 ஜூலை, 2013

Devotion to Mother.


அன்னையும் தந்தையும்

பல சுவைக் கவிதைகளில் இப்போது ஓர் அழகிய இனிய பாடலைப் பதிவுசெய்வோம். இப்பாடலை எழுதிய கவிஞர் , இசைமேதை பாப நாசம் சிவன் என்று அறிகிறோம்.

அன்னையும் தந்தையும் தானே --- பாரில்
அண்டசரா சரம் கண்கண்ட தெய்வம்;

தாயினும் கோயிலிங் கேது -- ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திரமேது;
சேயின் கடன் அன்னை தொண்டு -- புண்ணிய
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலமும் இதிலுண்டு!

தாயுடன் தந்தையின் பாதம் --- என்றும்
தலை வணங் காதவன் நாள்தவறாமல்
கோயிலில் சென்றென்ன காண்பான் --- நந்த
கோபாலன் வேண்டும் வரம்தருவானோ?

பொன்னுடன் ஒண்பொருள் பூமி ---- பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வு,
அன்னை பிதாவின்றி ஏது -- மரம்
ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது

This song was rendered by M K Thyagaraja Bhagavathar in the film "Haridass" 

சனி, 6 ஜூலை, 2013

அத்துப்படி

அத்துப்படி என்ற சொல்


அத்துப்படி என்ற சொல் இதுபோது வழக்கில் உள்ளது. இது ஒரு பேச்சு வழக்குச் சொல்.

இது எங்ஙனம் அமைந்தது என்று ஆராயவோமா?

ஐயப்பாடு (சந்தேகம்) யாதுமில்லாமல் மனத்தில் பதிந்து தெளிவாய் இருப்பதான ஒரு நிலையைக் குறிப்பதே இந்தச் சொல்.

அற்று  என்பது அத்து என்று பேச்சுவழக்கில் மாறியுள்ளது.

அற்று = ஐயம் திரிபுகள் அற்று.

படி என்பது மனத்தில் பதிந்திருக்கும்  (படிந்திருக்கும் ) நிலை.



அறு >( அற்று) என்ற  ஒரு பகுதியுடன் "இயை" ந்து "ஆய" து   "அற்று இயை ஆய(ம்)" = அற்றியாயம் => அத்தியாயம் என்று வந்ததுபோன்ற ஒரு சொல்தான் அத்துப்படி என்பதும்  ".

இயை + ஆய(ம்) என்பதில்  "ஐ"  கெட்டது.



ஓப்பீடு :-

சமத்கிருதத்திலும்  " passing , lapse , passage ; passing away , perishing , death"  என்பனவே   பொருளாம்  . இந்நிலை  அறு  என்னும்  வினைச்சொல்லுக்குப் பொருந்துவதே ஆகும்.   

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாதமொன்று வெண்பா

மாதமொன்று வெண்பா மதிபெறப் பாடினும்
சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
தீதில்லை தென்மொழியின் தேனைப் பருகிடத்
தோதில்லை என்பதோ பொய்.

கவிதையில் மட்டும் மாதமோர் வெண்பா என்று வருவதில் இழுக்கில்லை என்றாலும் இங்கு மாதமொன்று என்று பாடப்பெற்றுள்ளது. அந்த விதிவிலக்கு தேவையற்றதாகிவிடுககிறது.




ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

தத்தித் தொடரும்,,,,,,

  இது  ஒரு கவிக்கு உற்சாகமூட்ட எழுதியது. 28.11.11.


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்.

கண்ணுக்குள் காதலி


கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே 
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.

போராட்டம்

கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.

புக்கார்  -  புகுந்தார் ;  ஆழி  - கடல் ,

போராட்டத்தில் ஈடுபடுவது துன்பம்  தருவது என்பது  கருத்து 
 புகை  என்றது கண்ணீர்ப்புகையை ,

புதன், 20 பிப்ரவரி, 2013

thumb drive fault

விரலகை வென்பது வேலைசெய் யாமல்
வரவிய லாதுபோ யிற்றே == பரல்களாய்
நீங்கள் வரைந்தவை நின்றன நேர்த்தியாய்!
தேங்குதல் உற்ற பிற,

அண்மையில் எனது தம்ப் டிரைவ்  (or flash drive) என்னும் விரலகைவு கெட்டுவிட்டதால் நானெழுதியவை பல தொலைந்துவிட்டன, இதன்காரணமாக  ஒரு கவிதை அரங்குக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. அதைப் பற்றிய பாடல் இது.

வரவிய லாதுபோ யிற்றே என்பதை  வர இயலாது  போயிற்றே என்று வாசிக்கவும்  வெண்பாவின் அசை சீர் காட்டுவதற்காக  இப்படி எழுத
நேரிடுகிறது. ( வகையுளி)

 விரல் அகைவு என்பதில் அகைவு என்பது    :   அகைத்தல்  drive.

இதில்  "நீங்கள் " - வேறொரு  கவிஞரைக் குறிப்பது,

பரல்  என்பது சிறு கல், விதை முதலியவை குறிக்கும் . விலையுயர்ந்த  கற்களையும் குறிக்கும். மணிப்பரல் என்றும் பொருள்படும்.



A praise

மடை திறந்  தன்ன கவியருவி !  நைகரா  !
கிடைதிறம்  கண்டு கிளர்வுற்றார்  பல்லோர் 
நடையில் அலங்காரம் நன்மொழிகள் இன்னும் 
உடையதாம் இஃதிங்  குரை 

This was written to praise someone who was writing poems well. But was not communicated to him thereafter.

நைகரா -   நயாகரா நீர்வீழ்ச்சி, கிடைதிறம்  -  கிடைக்கப்பெறும் தன்மை . பல்லோர் -  பலர் 



  

யாவருக்கும் இடமுண்டு

கற்பனை பாவின்  கலையே   அதன் நிழலில்
 நிற்பன பாவலர்தம்  நெஞ்சங்கள் ---- வெற்பென
ஓங்கும் உயர்நிலையில் நின்றோரை, மற்றோரைத்
தாங்கும்  நிலத்தாய் மடி .




பாவின் கலையே =  கவிதைக்குரிய கலையாம் ;   வெற்பென -  மலைபோல  ;

நிலமானது  கற்பனையில்   வாழ்வோரையும்  பிறரையும்   தாங்கிக்கொள்கிறது  யாவருக்கும்  இடமுண்டு  என்பது என்பது  கருத்து
  

சின்னஞ்சிறு கிளிகள்

சின்னஞ்  சிறுகிளிகள்   சீரும்  அழகேதான்
 பன்னிவரும்  சொல்லசைகள்  தாமும்  பயிலமுதே
தின்னவொரு வண்பழமாம் தேனாம் மயங்காமல்
உண்ணப்பே ரூற்றாம் உரை

இது சிறுபிள்ளைகள் பற்றியது

அசை   சீர்    தளை  முதலியவற்றைக்  பாவலர்கள்  பாட்டெழுதும்போது  கவனித்துச்  சுவைத்து  எழுதுவர் .  ஆனால்   சின்னப் பிள்ளைகளின்  பேச்சிலே இவையெல்லாம்  உள்ளன,  அவர்களின் பேச்சில் வரும்   சீர்களும் அழகுதான். அவர்கள்  பன்னிப் பன்னிப்  பேசுகையில் வரும் அசைகளும் பயிலும் அமுதமே, பழம், தேன் . நீரூற்று  என்பவையெல்லாம் அவர்களிடம் பேசுகையில்  காணலாம் .  எத்துணை  இனிமை !!    




Moon trapped by gravity of earth

 நிலமகள்  நீள்கவர்ச்சி நேர்ப்பட்ட  நிலவும்
உலவும் சுழல்சுற்றின் உண்மை ---சொலவும்
அறிவியலார் முன் நிற்க ஆங்குப்பா வல்லோர்
 நெறிவியக்க நீங்கிற்றே காண்


இதன் பொருள் :நிலமகள்  -  பூமியின்,  நீள் கவர்ச்சி -நீண்ட இழுப்புச் சக்தி ;
நேர்ப்பட்ட  -  வழிப்பட்ட ;  நிலவும் - சந்திரனும் ;  சுழல் சுற்றின் = சுழன்றுகொண்டும்  சுற்றிக்கொண்டும்;   உலவும் உண்மை -  நடைபெறுகின்ற தென்ற சரியான நிலையை ;  சொலவும்  = சொல்லவும் ;  அறிவியலார் = விஞ்ஞானிகள்  ; பா வல்லோர் -  கவிவாணர்கள் ;  நெறி  = பாடும்  முறைகள் ; வியக்க -  நாம் வியக்கும்படியாக ; நீங்கிற்றே காண்  -  அவறிவியலார் வழியினின்றும்  நீங்கிச் செல்கின்றதே , காண் = கண்டுகொள்ளுங்கள் 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

.the nature of moon

தண் பாலாய் வானில் தகதகக்கும் தட்டனைய
மண்கோளும் ஆகுமே மந்த நிலா ---பண்பாடும்
வண்கவிகள்  வாய்ப்பட்டு நின்றோம்   வரைபாவின்
நுண்ணெறிகள் நூற்றின்  மிகும்

தண்பாலாய்  =  பால் நிறத்தில் ' தட்டனைய - ஒரு தட்டுப்போல் தோன்றும்;
மண்கோள்  - மண்ணாலான உருண்டை; மந்த - குறைந்த ( ஒளி ')
பண்பாடும் = பாடல்கள் இயற்றும்; வண்கவிகள் = சிறந்தகவிகள்;
வாய்ப்பட்டு - இடத்தில் அகப்பட்டு; நுண்ணெறிகள்  - நுட்பமான வழிகள்;
நூற்றின் = நுற்றின் பலவாய்.

 கவிகள்  நிலவினைப்  புகழ்ந்து பாடுகிறவர்கள் .  நாம்  அவர்களின் வாய்ப்பட்டு நிற்கின்றோம்  வாய் = இடம் . அதாவது  அவர்களின் கற்பனை வலைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்  அவர்களின் பாக்களில்  பற்பல சொற்பயன்பாட்டுத் தந்திரங்களை அவர்கள் கையாளுகின்றார்கள் ஆகவே வரைபாவின் நுண்ணெறிகள் நூற்றின் மிகும் எனப்பட்டது 


பூமி உதயம் The rising earth



நிலவில்போய் நின்றிமை பூக்கவிப் பூமி
புலர்வதும் என்னே பொலிவாம்  --- சிலவாகும்
இத்தகு ஓவிய   இன்காட்சி  ஒத்தவொன்று
மெத்தக் கவின்விளைப்ப தின்று.


இமைபூக்க  = பார்க்க;  பொலிவு = அழகு; புலர்வது = உதயமாவது
இன்று = இல்லை. கவின் - அழகு.

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பூமியின் உதயத்தின் அழகை காட்டுகின்றன. இதை இப்பாடல் எடுத்துச் சொல்கின்றது.

பூமி உதயம்  

moon and sky,



வானம் இலாநிலவு வண்ணம் இலாஓவம்
நீலம்  தரித்தே நிலைக்குமவள் --- காலமெலாம்
எத்துணை நல்லழகி என்றாலும் வானுடனே
ஒத்தணைய நின்றால் உயர்வு.

ஓவம் =  ஓவியம் ; நீலம் -= வானத்தின் நீலநிறம் ;  ஒத்தணய  - ஒன்றுபட்டு; இது  வானத்தை 1நிலவின் காதற் கணவனாய்க் கற்பனை செய்தது .

cauliflower


காலிபிளவர் என்பது நாம் சமைத்துண்ணும் ஒருவகைக் காய்கறியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்.
இது ஸ்காட்லாந்துச்சொல் " கோலே", ஜெர்மானிய "கோல் ஸ்லா" இலத்தீன் காலிஸ் முதலியவற்றுடன் தொடர்பு உள்ளதென்பர். இதன் அடிப்படைச் சொற்பொருள் கால்- கோல் (stem, stalk. stick) , பூ ஆகியவை என்பர்.

தமிழில் கால் - கோல் என்பவை நீட்சி குறிக்கும் சொற்கள். கால் > காலி எனின் " காலை உடையது" என்று பொருளுரைக்கலாம்.

இந்தக் கால்கள், காலிபிளவரில் ஒன்றுக்கு ஒன்று பிளவு பட்டு நிற்பவை. பிளவு >பிளவர். இது ப்லோரா (flora) என்ற இலத்தீன் சொல் எனப்படுகிறது. பிளவுறு என்பதும் பிளவுர்> பிளவர் என்று திரியலாம். அல்லது அர் என்பது சொல்லீறு என்று விடுத்துவிடலாம்.

பூக்களும் மொட்டு பிளந்து வருபவையே ஆகும். பிளவர் என்பதும் நன்கு ஆராயத்தக்கதாம்.

தமிழ் ஒரு மூலமொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல இலக்கம் சொற்களை ஆய்ந்து ஆய்ந்து இதனை விளக்கலாம்,

காலிபிளவர் என்பது தமிழென்று நிறுவுதல் நோக்கமன்று. We just want to refer to the Tamil roots of the Latin language.

விநாயகர்


vinAyakan

விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,

வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.

ஆயகன் - ஆய்  அகன் :  இது வினைத்தொகை.

இனி வி நாயகன் என்று பிரித்துப் பொருள்  கண்டாலும்  வி  என்பது விழுமிய என்பதன் குறுக்கமே. நாயக என்பது நயத்தல் (விரும்புதல் ) என்பதனடியாகப் பிறந்த சொல்லே என்பதுண்டு . இதற்கு  விளக்கம் தேவைப்பட்டால் எழுதுவோம்.  

ஆபாசம்


ஆபாசம் "green speech or conduct "

பச்சையாக நடத்தல், பச்சையாகப் பேசுதல்.


பச்சை, பாசி, பாசம் (பாசம் பிடித்திருப்பது). பாசிலை, பச்சூன், பச்சிலை, பச்சோலை, பச்சைப்பெருமாள், பச்செனல், பாசிமணி, பாசிப்பயறு, பசுத்தல், பைங்கிளி, பசுங்கிளி, பசும்பால் (பச்சைப் பால்), பசலை -- என்று பச்சை குறிக்கும் அல்லது நிறத்தோடு தொடர்புகொண்ட சொற்கள் பல

பகரத் தொடக்கத்துச் சொல், பா என்று நீண்டும், பசு-, பை- என்று திரிந்தும் நிற்பதை மேலே கண்டுகொள்ளலாம்.

இடக்கரானவற்றைப் பேசுங்கால், அவற்றை அடக்கிப் பேசாதவன், "பச்சையாகப் பேசுகிறான்" என்பது வழக்கு.

பாசம் என்பது பச்சை குறித்தது.

இனி, பாசம் என்பது ஆபாசம் என்று ஆகாரம் பெற்று பச்சையாகப் பேசுதலை, அல்லது நடந்துகொள்ளுதலைக் குறிக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது, ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.

ஆகாயம் - காயம் ஆவது.

ஆபாசம் - இடக்கரடக்கல் இல்லாதது. பச்சை ஆவது.

ஆபாசம் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள், அனார்ய, அசப்த என்பன.

how the moon helped lovers


காட்டில் காணமற் போன காதலளைக் கண்டுபிடிக்க உதவிய மதியை இப்பாடல்  புகழ்கிறது.


இருங்கானுட் சென்றோன்  இருளில் மறைந்தான்
உறங்காது உறைந்தாள் தலைவி---சுணங்கா(து)
ஒளியால் வழிகாட்டி ஒன்றுபட நேர்வித்(து)
அளியால் அணிசெய் மதி.

அளி -  அருள் , அணி - அழகு 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

சென்றவிடம் எங்கோ-?

தீபாவளிக்கு நண்பர் சின்னக்கண்ணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவருக்கு இந்த வெண்பா"

பெரியகண்ணன் பேர்புகழ்தீ பாவளி நாளில்
சிறியகண்ணன் சென்றவிடம் எங்கோ-- நறியதேன்
ஒத்த தமிழ்ப்பாடல் ஒன்றிவண் தந்தவரும்
மெத்தப் புகழ்ச்சிபெறல் விட்டு.

இருபொருள்:

தந்தவரும் -- தந்து+அவரும், தந்தவர் +உம்.

கணினிக் கோளாறு சமாளிக்கும் முறை


கணிணியில் கோளாறினால் சில வேளைகளில் நாமேழுதுவது தொலைந்துவிடுகிறது! இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  இந்த வெண்பாக்கள் தோன்றின.



தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.

(பொருள்:  தான்தொலையா நிற்றலுறும்  -  தான் தொலையாமல் நிற்கும். விட்டச்சம்  - அச்சம் விட்டு என்று முறைமாற்றிப் பொருள்கொள்க.  )

திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.

(இது இணையதளத்தில் அதைப்படித்தவர்கள் வைத்திருந்தால் தந்துதவும்படி  வேண்டுகிறது.
 ஆங்கு = அங்கு ;  ஈங்கு = இங்கு 
உறுத்தி உளைச்சல் உளத்தே -   உளத்தே  உளைச்சல் உறுத்தி  என்று முறைமாற்றுக, )



புதன், 19 டிசம்பர், 2012

a stab for a kind-hearted act of an old man...


மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்கு.............

மனமிரங்கித் தண்ணீர் தந்தவர்க்குக் கத்திக் குத்தா?



நீர்தருக என்றார்க்கு நீரைத் தந்தார்.
நீர் குடித்து நன்றிசொன்ன நிமையம் அந்தோ
கூர்நெடிய கத்திதனை குறித்து நீட்டிக்
கும்பிகலங் கிடவொருத்தன் குத்தினானே!
பார்வைதடு மாறுகின்ற முதியோர் கண்டு
பாய்ந்தோட முடியாத காலோர் பாங்கில்
நேரிரங்கும் நெஞ்சிலையோ திருட்டுக் கும்பல்
நிகழ்த்தியதை நினைத்தாலே பதைக்கும் நெஞ்சம்.

செய்தி: மலேசிய நண்பன் 8.12.2012.

நிமையம் = நிமிடம்.

வியாழன், 13 டிசம்பர், 2012

இணங்கி நடந்து............


இணங்கி நடந்து வணங்கிக் கிடந்தால்
சுணங்கிச் சுருளாத வாழ்க்கை--- பணங்குறையா
நன்னிலை என்றாலும்  உண்மையே மேற்கொண்டு
தன்னிலை தாழாமை  நன்று.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

pre- islamic showcase


pre- islamic showcase

இஸ்லாமின் முன்கலை ஈடில் பொருள்கள்
இசைவாகக் காட்சிக்கே இட்டார் --திசைதோறும்
யாவரும் கண்டின் புறுமா றதுகண்டு
நாவரும் பாட நலம்.

http://www.voanews.com/content/saudi...d/1555885.html


இஸ்லாமின் முன்கலை -  இஸ்லாம் மதத்தின் தோற்றத்திற்கு முன்னிருந்த கலைகள்   
நாவரும் பாட நலம்.-  நலம் பாட நா  வரும் 


சனி, 24 நவம்பர், 2012

ரத்து




ரத்து என்ற சொல்  தமிழன்று என்பதே பொதுவான கருத்தாகும். ஆனால் தமிழ் மூலங்களை உடைய சொல் என்பதை முன்பு வேறோர் இணையதளத்தில் காட்டியிருந்தேன். அந்தத் தளம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது மீண்டும் அந்தச் சொல்லைக் காண்போம்.

இறு > இறுதல்=  முடிதல்.
இறு > இறுதி  என்பதைக் காணவும்.
அறு> அறுதல்  :  அறுந்து போதல்,  அற்றுப்போதல்.
அறு > அற்று  என்பது வினை எச்சம்.
அறு > அற்று என்பது  அத்து என்று பேச்சு வழக்கில் வரும்.
இறு+ அத்து = இறத்து  >  றத்து > ரத்து.
தலை போய் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டதால் அது வேற்று மொழிச்சொல் போல் தோன்றுகிறது.
அற்று இறுதல் என்பதே  இறு அத்து  என்று முறைமாறி அமைந்துள்ளது.
இதேபோல்  அமைந்த ரவிக்கை என்ற சொல்லையும் கண்டு தெளிக.
முறை மாறி அமைந்துள்ளதால்,  இதைத் தமிழெனல் ஆகாது என்று இலக்கணியர் கூறலாம்.
சொல்லை ஆய்ந்து எழுதுவது மட்டும்தான் நம் வேலை.  முறைப்படி அமையாவிட்டால் இப்போது நாமென்ன செய்வது?

புதன், 14 நவம்பர், 2012

அன்னாசிப் பழம் < அருநாசிப் பழம்


அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது  "அன்னாசி".
மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"

இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.

அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.

அரு+ நாசி  > அருநாசி >அன்னாசி.

நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது.  நாவிற்குச் சீர்தருவது  நா+சீர் = நாசீர்? நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு.

இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை @ இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள். *

@(சில விரைவில் வெளியிடப்பட்டும் )


தீபாவளியே மீ ண்டும் எப்போது வருகிறாய் ?



come again

வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.

தீபாவளியே!


ஓராண்டுக் காலம் உனக்காகக் காத்திருந்து
சீராக உற்றார்நம் நண்பருடன் ---தீராத
நன்மகிழ் வோடுநாம் நண்ணிய தின்பண்டம்
பொன் திகழும் நாள்தந்த தே.




குசும்பு = குறும்பு.




திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துக்கள்

நாபா ரிதுபார்க்கும் நன்னீலன் தாள்போற்றித்
தீபா வளிஆர்க்கும் தேஞ்சுவையூண் --- ஆன்பாலும்
உட்கொண் டிமைப்போதும் ஓர்துயரும் தீண்டாமல்
கட்கண் சிறக்கவாழ் வீர்.


நா = நாவு. பாரிதுபார்க்கும் - இவ்வுலகைக் காக்கும்.
நன்னீலன் -விட்ணு ( விஷ்ணு). ஆர்க்கும் - தரும்.
தேஞ்சுவையூண் - இனிய உணவு வகைகள். ஆன் பால் - பசும்பால். கட்கண் - வாழ்வின் எல்லா முனைகளிலும்.

அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக !  

வியாழன், 11 அக்டோபர், 2012

கண்> கரு > கருணை


வீரம், காதல், இரக்கம் போன்ற  பலவேறு பண்புகளும், கண்களின் வழியாகவே வெளிப்படுவனவாகத்  தமிழன் கருதினான்.
தமிழனின் மொழியில் அமைந்துகிடக்கும் சொற்கள் பலவும் இக்கருத்தையே நன்கு படம்படித்துக் காட்டுகின்றன.

வீரம் குறிக்கும் "தறுகண்மை" என்னும் சொல் கண்ணினையே நிலைக்களனாகக் கொண்டதாகும். காதலுக்கும் கண்ணுக்கும் உள்ளதாக இலக்கியங்கள் கூறும் தொடர்பினை ஈண்டு விரித்துரைக்கத் தேவையில்லை.

இரக்கம், மனநெகிழ்வு முதலிய கண்ணினின்றே வெளிப்படுவன என்று இலக்கியம் கூறும். கண்ணோடுதல், கண்ணோட்டம் என்ற சொற்களை ஆய்ந்து இதனை அறியலாம்.கண்ணோட்டம் என்பது இரக்கம்.

கண் என்பது கரு என்று திரியும் என்பதை நாம் மேலே ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கண்> கரு > கருணை.

முகத்தின் ஏனை உறுப்புகட்கு இல்லாத ஒரு  திறம்  கண்ணுக்கு உண்டு. கண் கலங்கி நீர் சிந்தி அழக்கூடியது. கண்ணிலிருந்து (கண் என்றசொல்லில் இருந்து)  கரு என்பதமைந்து கருணையில் முடிந்தது மிக்கப் பொருத்தமுடையதாகும்.

நெய்(தல்) என்ற சொல்லே "ணை" என்று மாறி சொல்லீறாக நிற்கின்றது. கண் சென்று ஈடுபாடு கொள்ளுதல் என்பது பொருள்.

கண்> கரு > கருநெய் > கருணை.

எண்ணெய என்ற சொல் எண்ணை என்று வழங்குதல் காண்க. தமிழ்ப் புலவன் இதை எண்ணெய் என்றே எழுதவேண்டுமென்றாலும் எண்ணெய் வணிகர் கேளார். திரிபு வழக்கில் உள்ளது.

அங்ஙனமே, கருணை என்ற திரிபையும் புலவர் ஏற்கமாட்டார்.எனினும் சங்கதத்தில் நல்ல  இடப்பிடித்துக்கொண்டு இது மீண்டும் தமிழுக்கு வந்து வழங்குகிறது,


குறிப்பு: கண்+ எய்(தல்) =கண்ணெய் > கருணை எனினும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

சிறு > சின். etc


See last twi posts on etymology and continue:


இந்த இணைமொழிகளையும் ஆராயுங்கள்:


சின்னஞ் சிறிய குடில்

இதில்: சிறு > சின்.

பென்னம்பெரிய மனிதர்

பெரு > பென்.

கன்னங் கரேல் என்றிருப்பான்.

கரு > கன்.

மேலும், கரு என்பது கண் என்றும் திரியும்.

கரு > கருப்பு > கருப்புசாமி.

கரு > கண்> கண்ணன்.

வருணம் என்ற சொல் வண்ணம் என்ற வடிவிலும் இலங்கும்.

வரு<> வண்.

இவற்றுள், ரு, று, ந், ண் வேறுபாடின்றித் திரிந்தன மேற்கண்டவை.

வரு(வான்) > வந்(தான்) (வந்)

இவ்வினை முற்றுகளில் வரு என்பது வந் (=வன்) என்று திரிதல்
காண்க.

These changes support aru(nthu) > an(nam) change.

In Tamil, annam only refers to cooked rice The Sans and Pali annam include fish, meat and also rice.
Is this a substantial difference? If so, the tamil annam is different from vadamozhi annam. 

There are a number of persons in China having the name Nannan. There are also persons having this name in Tamil Nadu, India. We must therefore conclude that the Tamil Nannan is not the same word as the Chinese Nannan or European Nannan for that matter!!

விண்ணப்பம்

(Tto continue reading from the last post. connected issues, )


விண்ணப்பம். விரு > விண்.

விரும்பி மேல்செலுத்துவதே விண்ணப்பம். இதில் உள்ள விண் என்ற சொல்லைக் கவனிப்போம்.


விரு > விண்.

இதுவும் மேலே சொன்ன கரு > கண் என்ற திரிபின்பால் பட்டதே.

விழைந்து முன்னே அல்லது மேல் (அதிகாரிக்கு அல்லது கடவுளுக்கு) ச் சமர்ப்பிக்கப்படுவது,

விண்+அ+பு+அம்.

அ என்பது சாரியை போன்று பகுதியையும் விகுதிகளையும் இணைப்பது.

அனுப்பு என்ற சொல்லும் அகரச் சுட்டுச் சொல்லினின்று எழுந்ததே.

எனவே, இங்கு அகரம் மிகவும் பொருத்தமான இணைப்பெழுத்து ஆகும்.

அன்றி, விடுத்தல் கருத்துடைய விள் என்பதினின்றும் இதற்குப் பொருள் கூறலாமாகையால், இஃது இருபிறப்பி எனலும் கொள்ளத்தக்கதே.

ஒரு நீண்ட கருத்தைச் சுருக்கி இச்சொல் ஆக்கப்பட்டுள்ளதென்பதை அறிகிறோம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

annaasi


அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது  "அன்னாசி".
மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"

இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.

அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.

அரு+ நாசி  > அருநாசி >அன்னாசி.

நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது.  நாவிற்குச் சீர்தருவது  நா+சீர் = நாசீ(ர்) >    நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு. ( சீகாரம் 'சி'  ஆகும். ரகர ஒற்று கெடும்).
இங்கு சீரென்றது ஒலிக்கு உண்டாம் சீரினை. நாசி என்பது திரிசொல்.  இறுதி ரகர ஒற்று பெரும்பாலும் வீழ்வது.  வரு> வார் > வா என்பதில் கடைசி இரண்டு திரிசொற்களைக் காண்க. வாருங்கள் > வாங்க என்பதில் ருகரமும் ளகர ஒற்றும் தொலைந்தன. தமிழ்மொழி இயன்மொழி ஆயினும் திரிசொற்களுக்குப் பெயர்போனது ஆகும். இத்திரிபுகளின் கூட்டமே தனிமொழிகளாய்விட்டன.

இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு:

 "நா+சீர் = நாசீர்?" :-
 இது முன் இவ்விடுகையில் ஓரிடத்தில் காணப்பட்ட நிலை. இக்குறி
எம் பழைய முன்வரைவுகளில் இல்லையாதலால் இன்று நீக்கப்பட்டது.
கள்ளப்புகவரால் இக்குறி இடப்பட்டதென்பது தெரிவிக்காமல் புலப்படும்.

8.5.2020 3.03 பகல்.

சனி, 22 செப்டம்பர், 2012

எவ்வாறு ?

Now, on a recent funny criminal case in TN.


ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!

மடுத்தசெவி எல்லாம் விழுந்து --அணல்#
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார், எவ்வாறு ? அறிகிலேனே.

மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு? அறிகிலேனே!



Notes

#அணல் -தொண்டை, வாய்

ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.

மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )

வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.