சனி, 6 ஜூலை, 2013

அத்துப்படி

அத்துப்படி என்ற சொல்


அத்துப்படி என்ற சொல் இதுபோது வழக்கில் உள்ளது. இது ஒரு பேச்சு வழக்குச் சொல்.

இது எங்ஙனம் அமைந்தது என்று ஆராயவோமா?

ஐயப்பாடு (சந்தேகம்) யாதுமில்லாமல் மனத்தில் பதிந்து தெளிவாய் இருப்பதான ஒரு நிலையைக் குறிப்பதே இந்தச் சொல்.

அற்று  என்பது அத்து என்று பேச்சுவழக்கில் மாறியுள்ளது.

அற்று = ஐயம் திரிபுகள் அற்று.

படி என்பது மனத்தில் பதிந்திருக்கும்  (படிந்திருக்கும் ) நிலை.



அறு >( அற்று) என்ற  ஒரு பகுதியுடன் "இயை" ந்து "ஆய" து   "அற்று இயை ஆய(ம்)" = அற்றியாயம் => அத்தியாயம் என்று வந்ததுபோன்ற ஒரு சொல்தான் அத்துப்படி என்பதும்  ".

இயை + ஆய(ம்) என்பதில்  "ஐ"  கெட்டது.



ஓப்பீடு :-

சமத்கிருதத்திலும்  " passing , lapse , passage ; passing away , perishing , death"  என்பனவே   பொருளாம்  . இந்நிலை  அறு  என்னும்  வினைச்சொல்லுக்குப் பொருந்துவதே ஆகும்.   

கருத்துகள் இல்லை: