சனி, 15 ஆகஸ்ட், 2026

''பெலக்கப் பேசு'' என்றது -. கோஷம் என்பது

 ''பெலக்க''  என்ற எச்சவினை, இன்னும் வழக்கில் உள்ளது.  '' தம்பீ, கொஞ்சம் பெலக்கப் பேசினால்தான் எல்லாருக்கும் கேட்கும்''   என்னும்போது, இச்சொல் வந்துவிடுகிறது.  இந்த எச்சத்துக்கு உரிய முழு வினைச்சொல்,  '' பெல(த்தல்)'' என்பதுதான்.  

எடு> எடுக்க.   கெடு> கெடுக்க,  வெறு>  வெறுத்த  என்பனபோலும் வினையின் போந்த எச்சமே இதுவாகும்.  தொழிற்பெயர்கள்  எடுத்தல், கெடுத்தல், வெறுத்தல் என்பனவாம். இளை> இளைத்தல் என்பதும் காண்க.  ஆகவே பெலத்தல் என்பது நன்றுதான். பெலக்குதல், பிலத்தல் என்ற வடிவங்களும் கிடைக்கின்றன. இவை ஏற்புறவே,  பலத்தல் என்ற சொல் ஏற்புறாது போகுமோ. வலத்தல் என்பது பொருள் திரிபுடன் வருகின்றது. இது  சொல்லல், நினைத்தல், வளைத்தல் என்றும் பொருள்தரும்.

இருநூறு முன்னூறு ஆண்டுகட்கு முன்  வெளிவந்த அகரவரிசைகள் ஆய்வுக்கு வேண்டியவை ஆகும்.  அவற்றைக் காத்து வைப்பதற்கு நடவடிகைகளை தமிழரசுகள் உதவவேண்டும்.

வல் என்பதே அடிச்சொல்.  வல்- வலம்> பலம்  என்பது திரிபு. ''பலத்த கைதட்டல்'' என்பது இன்றும் வழக்கில் உள்ளது.

கோடு  என்றால் தமிழில் வளைவு என்று பொருள்.  சங்கப் பாடலில் '' கோடுயர் உச்சி''  என்றால் வளைவான உச்சி( மலை) என்பதுதான்.  பண்டை மக்கள் வளைவாக நின்றுகொண்டு ஒலி எழுப்பியதே  அடிக்கடி நிகழ்வாகும்.  கோடு> கோடம் என்பது வளைந்து நிற்றல்.  இது ஒலி எழுப்புதலையும் குறித்தது.  பின்னர் கோடம்> கோஷம் என்று மெலிந்தது.  கோடித்தல் > கோஷித்தல்.  கோடித்தல் என்பது வழக்கிறந்தது.  கோஷம் தான் கோடம் ஆனது என்று பிறழ நினைத்தனர். வேஷம் என்பதற்கு யாம் தந்த விளக்கத்தைப் படிக்கவும். வேய்ந்துகொள்ளுதலே வேஷம். மேலிட்டுக்கொள்ளுதல். ட என்பது ஷ் என்பதன் சம ஒலி  ( சமகதம் >  சங்கதம் > சம(ஸ்)கிருதம்).

கோடு என்பது எல்லையாதலால்,  கோடம் என்றும் சொல்வர். ஆனால் இது பெரிதும் வழக்குப்பெறவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: