சிவராத்திரியில் மூன்றாம் காலப் பூசையில் கலந்துகொண்டு யாவருக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்ந்தோம். அப்போது எடுத்த படம்.
படத்தில் உபயதாரர்கள் திரு குமரன், திருமதி சுனிதா மற்றும் மா. மணி
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சிவராத்திரியில் மூன்றாம் காலப் பூசையில் கலந்துகொண்டு யாவருக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்ந்தோம். அப்போது எடுத்த படம்.
படத்தில் உபயதாரர்கள் திரு குமரன், திருமதி சுனிதா மற்றும் மா. மணி
சாரங்க பாணி என்ற பெயரை சொல்லாய்வு முறையில் காண்போம்.
சாரங்கம் என்பது வில் என்று பொருள்படும் ஒரு சொல். இதில் சார் என்பது முன் சொல்லாய் உள்ளது. சார் என்பது ம் சேர் என்பதும் ஒரு பொருட் திரிபுகள்.
வில்லிலிருந்து புறப்பட்டுக் குறிவைத்த இடத்திற்குச் சென்று சேர்வது அம்பு. அமபு சார்ந்திருக்கும் வில்லிலிருந்து புறப்படுவதால் சார் என்ற சொல் முன் வைக்கப்படுகிறது. விட்டபின் குறிவைத்த இடத்தை அது அணுகிச் செல்லும்.
இப்போது சார்+ அண்+ கு வரை வந்துவிட்டோம். அண் கு என்றால் அணுகிச் சேர்வது என்று பொருள். கு என்பது சேர்வுக் குறிப்புச் சொல். அம் விகுதி இறுதியைக் குறிக்கிறது. அம் அத்துடன் முடிவது கருத்து. அல்லது வெறும் விகுதி எனினும் ஒத்துக்கொள்ளலாம்.
அதாவது அம்புக்கான வேலைக்கு அமைந்தது வில் என்று பொருளாகிறது.
சார்ந்திருந்த அம்பினை அண்மிச் சேர்வித்து இயக்கும் கருவி என்று பொருள்.
அண்கு என்பது அங்கு என்று திரியும்.
எனவே சாரங்கம் என்பது தெளிவான தமிழ்ச் சொல்லாகிறது.
எல்லா ஆயுதங்களும் பண்ணப்படுபவை. அதாவது தேர்ந்தவர்களால் உருவாக்கப் படுவன.
பண்ணுதல் : பண் > பாண் ஆகும் சுடு சூடாகிறது.அதுபோல் முதனிலைத் திரிபு. மீண்டும் அம் விகுதி வந்து பாணம் ஆகிறது பாணத்தை வைத்திருப்பவன் பாணி.
ஆதலின் சாரங்கபாணி எனில் வில்லாளன் என்று பொருள்.
இது நல்ல தமிழ்ச்சொல்தான்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
அடுத்து வருபவை:
வந்தனம் - மார்ச்சு 9ல் வெளிவரும்.
சித்தர் - மார்ச்சு 4ல் வெளிவரும்.
நாம் தமிழரும் தமிழுலகும் பயன்பெற வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறோம். ஆகவே இங்கு விதிக்கப்பட்டுள்ள பதிப்புரிமையை இறத்து செய்துவிட்டால் மேலும் பலர் படிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் வசதியாகும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் ஒரு முடிவு மேற்கொள்ளப்படும்,
சில புலி வகைகளுடன் ஒப்பிடும் போது சிறுத்தை சற்று சிறிதாகவே உள்ளது. இதனால் இந்தப் பெயர் இவ்விலங்குக்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னர் விளக்கப்பட்டது.
ஆனால் இப்பெயர் கடுமையாகச் சீறுவதனாலும் ஏற்பட்டது என்று காரணமுள்ளது. அப்படியானால் :
சீறுதல் - சீறு > சீறு + தை > சிறுத்தை என்று குறுதலும் ஏற்புடையதே ஆகும். இதற்கு ஏற்புடைய சொல்லமைப்பு விதியாவது:
சா> சாவு > சாவம் ( சாவு+ அம்) > சவம் என்றும் குறுகி அமைதல் போன்றதே ஆகும். இது. தோண்டியது போல இருப்பது தொண்டை என்று குறுகுதலும் காணலாகும். ஆதலின் இவ்விலங்குப் பெயர்: இருபிறப்பி ஆகின்றது என்பதையும் அறியவேண்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
அடுத்த புதிய இடுகை: சாரங்கபாணி என்ற சொல்லமைப்பு.Thursday 1242 afternoon will be published.. படித்து மகிழுங்கள்.
பஜ, பஜரே முதலிய வடிவங்களிலும் பகரமே வருகிறது. சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று தொட்டு நிற்கின்றன. அடுத்து அடுத்து வருவதால் பா+ அடு என்றும் விரித்துச்சொல்லுதல் கூடும். ஆனால் முன் காலத்தில் படிக்கும்போது இராகம் போட்டுத்தான் படித்தார்கள். இப்போது பாடிப் படிப்பதற்கு வெட்கப் படும் நிலை உள்ளது.
பரவுதல் என்பதும் படருதல் என்பதும் தோற்ற உறவுமுறை உள்ளவை. படர்> பஜர் என்று தொடர்பு காணலாம். படர் > பஜர் என்பதும் காண்க. ஒரு பாவில் சொற்கள் படர்கின்றன என்பதும் காண்க.
ரகர டகரத் தொடர்பை, மடி> மரி என்பதிற் காணலாம்.
எந்தச் சொல் பயன்பட்டிருந்தாலும், பாடு> பாடன் > படன் > பஜன் என்பது உறுதி.
வா என்ற சொல், இறந்தகாலத்தில் வந்தான், வந்தாள் என்று குறுகுவதைக் காணலாம். பெயராய் அமைகையிலும், சாவு> சவம் என்றும் தோண்டு > தொண்டை என்று குறுக்கமடைவது காணலாம். ஈர்த்தலில் வந்த சொல் இருதயம் என்ற வடசொல். ஈர்> இர்> இருது அ அம் > இருதயம் என்று உண்டானதுதான். இரத்தத்தை இழுத்து வெளியிடும் ஈர் அல்., ஈர்தயம் > இருதயம்.
ஏனைத் தென்மாநில மொழிகளில் பாடுபவன் என்பதற்க்கு ஈடான சொற்களையும் ஒப்புநோக்கி யுள்ளோம். " Badavanaru என்ற சொல்வடிவம் காணப்படுகிறது. இது "பாடுபவனார்" என்பதற்குச் ஒப்பானதாக இருக்கிறது என்பதை அறிக.
பஜன் என்ற சொல்லை அறிந்துகொண்டீர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
I have had the occasion to work closely with a Facebook Official who is my good friend by the pleasant and now unforgettable name of Elina Devia for quite some time now. In our respectful interactions we come across a great deal of work material in the course of serving our friends in our Facebook feed.
If a certain material is unusual or unacceptable, some officers would even go to the extent of creating a great deal of fuss in the course of which they would end up on the brink of of even a fist fight.
But Elina we found is a capable officer who had her own way of approaching any problem and resolving it with amity and calm enhancing interpersonal relations and workplace accord. Words transform into something pleasant. Office became a place to which you would want to revert more often in life.
She once told us this. In a note, she said that she considers me the most admirable person in the world but could not understand how the current material or action would go along with it.
It is clear to us that she knew very well how to change something that she was not prepared to accept. We saw that she had a great ability to do it without causing unnecessary friction.
If everyone acted like this, there would be less or no conflicts at work in the world. We should praise her for that.
It seems that she studied at an Indonesian University and graduated/ We hereby express our congratulations and best wishes to her.
History
Saved
இலாபம் என்ற சொல்லில் இல், ஆதல் என்ற இரண்டு பகவுகள் உள்ளன.
இல் என்பது இன்மை. இன்மை புகுந்துவிட்டால் புதிய வரவு இல்லை என்று பொருள்.
அடுத்து ஆதல் என்ற சொல் வருகிறது. இச்சொல்லுக்கு திரிபுகள் ஏற்பட்டுள்ளன. ஆ + அம் > ஆவம். ஆ (என்பது ஆக்கம் ) என்னும் வினையடி. ஆவம் என்பது வகர பகரத் திரிபால் ஆபம் என்றாகிறது.
வரவின்மை ஆக்கம் ஆவதுதான் ( மாறுவதுதான் ) மேல்
ஆக்கம் ஆகிய இலாபம்.
இல்லாமை ஆக்கம் ஆனால் அது இலாபம்.
இல் என்பதற்கு இடம் என்றும் பொருள் உள்ளது. இடத்தில் ஆவது என்பது வருமென இருக்கும் இடத்தில் ஆக்கம் பெறுவது என்றும் கூறின் அதுவும் சரியாகும்.
profectus என்ற இலத்தீன் முன்னேற்றம் என்ற பொருள் உள்ளது. தமிழ் இலாபத்தில் ஆவது என்பது முன்னேற்றமே ஆகும்.
தமிழர் பண்பாட்டில் உள்ள கருத்துப்படி ஒரு கெடுதல் ஏற்படின் அதை நலம் நலம் என்ற சொற்களால் மறைத்துக் குறிக்கவேண்டும். நல்கூர்ந்தார் என்ற சொல்லுக்கு நனமை அடைந்தோர் என்பது சொற்பொருள் ஆனாலும், வறுமை என்பதுதான் புரிந்துகொள்ளவேண்டிய பொருள் ஆகும். வறுமையிலும் செம்மை என்பதே மந்திரம் ஆகும். வறுமையில் ஒழுக்கம் காக்கவேண்டும், அதுவே முதன்மை யாகும் என்றறிக. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதே வள்ளுவனார் குறள். அதுதான் விழுப்பம் தருதலால்.
இல்லாதவிடத்து ஆக்கமே இலாபம் என்றும் கூறலாம்.
ஒருவனுக்குத் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே அல்லது பரம்பரை பரம்பரையாக முதலை விட அதிகமாக வருமானம் வந்துகொண்டே இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்படி வருவது சிறப்புத்தான் என்றாலும் இதை அவன் மாமூலாகக் கருதுவான். அவனிடம் யாரும்போய் சிறப்புடன் செய்கிறீர்கள் என்றால், " புதியது ஒன்றுமில்லை, என்றும் உள்ளதுதான், எனினும் இறைவனின் கருணை" என்பான். அவனிருக்கும் வரவு உயரத்திலிருந்து இன்னும் மேல்போகவேண்டும். அப்போது மனம் மகிழும். எப்போதும் வருவதற்கு எப்போதும்போல் செலவுகள் பட்டியல் இருக்கும். வாங்கித் தின்போர் பட்டியலும் நிரந்தரம் ஆனதாகவே இருக்கும். ஆகவே இலாபம் என்று கருதுவது ஓர் ஒப்பு நிலையிலிருந்து மேலாக வரும் வருமானம். புதிதாக ஒன்றும் இல்லையானால் அதுவும் ஒரு இல்லாமைதான். புதியது செய்யப் புதுவருமானம் வேண்டும். இதை இலாபம் என்ற சொல்லில் உணரவேண்டும். Similarity to existing or earlier conditions is nothing new. A normal margin has already been established. The margin must move to show something new. இல் என்ற சொல்லில் இதை உட்கிடை என்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
சொற்களின் பொருளை நிறுத்துக் காணவேண்டும். அல்லது சிந்தனை பலவாறு ஓடி வழிந்து விடாமல் நிற்பித்துக் காணவேண்டும். யாம் நிறு, நிற்பி என்றசொற்களை இங்குப் பயன்படுத்துவதற்குக் காரணி, இந்த இருசொற்களினின்றும் இது விளக்கமுறுகிறது என்பதுதான். கண்டு என்ற வினை எச்சம் இறுதி முடிபு கொள்ளுதல் என்பதை வலியுறுத்துகிறது. பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என்று சொற்களிலும் எல்லாமோ அல்லது சிலமட்டுமோ வரலாம்.
நிறு த்திக் கண்டு கொள்ளுதல்> நிறு கண்டு > நிகண்டு என்றாகும். இங்கு ஒரு வினைச்சொல்லும் அதனோடு ஒரு வினைஎச்சமும் கூட்டி இச்சொல் புனையப்பட்டுள்ளது. இப்படிச் சொல்வது எளிய முறையாகும். சமஸ்கிருதத்தில் மற்றும் பாலி மொழியில் வினை, இன்னும் எச்சங்களிலிருந்தும் சொற்கள் புனைவுறும்.
இன்னொரு முறையில்:
நில் என்ற சொல்லில் இரண்டு எழுத்துக்கள். இதில் கடைசி எழுத்துக் குறைந்தால் அதற்கு கடைக்குறை என்று பெயர். அடுத்த சொல் கண் என்னும் சொல். கண் என்ற சொன் முதலெழுத்து நீண்டுதான் காண் என்றாகி வினையானது. சொற்களை நின்று காணுதல் அதாவது ஆராயாமல் செல்லாது சற்று நின்று மொழிபொருள் காரணம் காணுதல். இதன் பொருள் விரித்தால், சென்றுவிடாமல் நின்று கண்கொள்ளப்படுவது என்றாகிறது. கண்ணிற் கொள்ளுதலாது கண்டுகொள்ளுதல். முடிவில்: நி + கண் + து > நிகண்டு ஆகும்.
The cats make a lot of noise. In the end they do end up with
a lot of kittens. Then why make a lot of noise.
A beautiful Sanskrit song begins like this: " Hei heart!
You sing that song! " BAJARE MANASE ...........direct your
energies to internal peace.
முன் சொல்லப்படா முடிவுகள் இங்கு கவியில் வருவதுபோல் முன்சொலா என்று திரிபுசெய்து இட்டிருக்கிறோம். மகிழ்வு நமதே.
ஆக்களைப் பற்றிக்கொண்டு செல்வது ஒரு பண்டைப் போர்த்தொடக்கத் தந்திரமாகும். முதலில் பயிற்சிபெற்ற கள்ளர்களை அனுப்பி மாடுகளைக் கவர்ந்து வரச்செய்வர். எதிரி நாட்டவன் வெகுண்டெழுவான். போர் தொடங்கிவிடும். ஆ பற்று என்பது ஆ பத்து ஆகி ஒரு சொல்லாய் ஆபத்து என்றாகிவிட்டது. இதுவும் பொருத்தமே.
இந்தச் சொல் இவ்வாறு அமைவதாகச் சொல்வது, முதன்மையான கண்டறிவு ஆன காரணத்தினால், இது முன்னர்க் கூறினோம். இது மக்களிடை வழங்கி மொழியிற் புகுந்த ஒரு சொல்.
ஓரு புதுமையான நடப்பு நிகழ்வு மிக்க வலிமையுடன் வந்து தாக்கினால் அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் வேண்டுமே.
ஆ+ வல் + து > ஆவற்று > ஆவத்து > ஆபத்து ( வகரப் பகரத் திரிபு)
இவ்வாறும் இச்சொல் அமையும். ஆகையினால் இது ஒரு இருபிறப்பி அல்லது பல்பிறப்பிச் சொல்.
ஆவது ( ஆகக் கூடியது) அற்றுப் போனாலும் ஆபத்துத்தான். இது:
ஆ + அற்று > ஆ+ அத்து > ஆவத்து > ஆபத்து என்று ஆகும்.
அற்று என்ற எச்சம் அத்து என்று திரியும். இன்னோர் அத்து இருக்கிறது. அது வேறு.
இங்கு ஆ என்பது ஆதல் வினை. இன்னொரு வடிவம்: ஆகுதல். இதில் கு என்ற வினையாக்க விகுதி சேர்ந்துள்ளது.
பிற பின் காண்போம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
தானியங்கள் என்பவை ஒரு குடியானவன் தனக்கென்று ஒதுக்கிவைத்துக்கொண்ட கூலங்கள். விளைத்த எல்லாவற்றையும் அவன் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. வேலை செய்தோருக்கு அளக்க வேண்டும். அப்புறம் ஊர்ப்பெரியவர்களுக்கும் கொடுக்கவேண்டும். பிற குடியாவர்களிட மிருந்து முன் பெற்றவற்றைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். அப்புறம் அரசனுக்கு உரியவற்றைத் தனியாக ஒதுக்கி வைத்து அவனுடைய அதிகாரிகள் வரும்போது முறைப்படி அளிக்கவேண்டும். வீட்டுக்கு வேண்டியவற்றை ஒதுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பிச்சைக்காரனுக்கும் ஏதாவது வைத்திருக்கவேண்டும். நிலக்கிழாருக்கு ( ஜமீந்தாருக்கு) வேண்டும். நாமே இவ்வளவும் அவன் கணக்கு என்று ஒரு பத்தி எழுதமுடிகிறது. அவனே வந்து எழுதினால் ஒரு பக்கத்துக்கு மேலாகவே இருக்கும். நீங்கள் சம்பளம் எடுத்தவுடன் செலவுத்திட்டம் எழுதிப்பார்த்தால் கடனாக வந்து முன் நிற்கும். துன்பமாதமே என்று பாடவேண்டி இருந்தாலும் இருக்கும். மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் என்று பாகவதர்போல் பாடமுடியாது. இவ்வாறு இன்னலுற்றுத் தான், தனக்கு என்று ஒதுக்கவேண்டி யுள்ளது. இப்படி ஒதுக்கியதற்கு ஒரு தனிப்பெயர் வேண்டுமே! தான் இயம் - தன்னால் இயன்றது என்று ஒதுக்கியதுதான் பின் தானியம் என்று உருவெடுத்தது.
இயன்றது என்பதும் இயம் என்பதும் எப்படி ஒன்றாகும் என்று கேட்கவேண்டும். இயம் > இயன் என்றாகும். அறம் > அறன் என்றாகவில்லை? திறம் - திறன் என்றாகவில்லை? உரம் - உரன் என்றாகவில்லை? பதம் > பதன் என்றாகவில்லை? பதனழிவு என்ற பதத்தைப் பாருங்கள். இயம்> இயன் என்பதும் அத்தகையதே. தமிழின் மொழி இயல்பு அது. மகர ஈற்றுச் சொற்கள் னகர ஈறாம். இயன்> இயன்+து > இயன்று என்று எச்சமாகிவிடுகிறது. இயன்> இயன்று > இயன்ற என்று மாறிமாறி அமையும். தனக்கு இயன்றதை வைத்துகொள்வது தானியம் என்று அறிக.
ஆங்கில நிலச் சட்டத்தில் personalty என்று ஒரு சொல் உள்ளது. A person's personal property என்று இதற்குப் பொருள். இதுபோலுமே, தானியம் என்றால் தனக்கு என்று வைத்துக்கொள்ள இயன்ற கூலங்கள் ஆகும்.
இவற்றுள் உளுந்து என்பது உண்டால் உடலில் ஓர் உந்துதலைத் தரும் தானியம் என்று பொருள். உள்ளில் சென்று உந்துதல் ஆற்றல் தரும் தானியம் என்ற பொருள் உள்+ உந்து > உளுந்து என்று பெயர் அமைந்தது. அதன் ஆற்றலைத் தெரிவிக்குமாறு அமைந்த சொல்.
கூலம் என்பது தானியப் பொருளதுதான். விளைந்த பின் அறுவடை செய்து ஒன்றாகச் சேர்க்கப்படுவது என்று பொருள். குல் என்பது அடிச்சொல். குல்> குலை. குல் > கூல்> கூல்_+ அம் > கூலம், இதன் சொல்லமைப்புப் பொருள் ஒன்றாகக் கொணர்ந்து குதிருக்குள் வைக்கப்படுவது என்பதுதான். வேறு சம்பளத்துடன் சேர்த்துத் தரப்படுவது என்று சொல்லலாம். சம்பளம் என்பதே சம்பு - நெல், அளம் = உப்பு என்று இரண்டும் முன்னாளில் ஒன்றாகக் கொடுக்கப்பட்டதனால் வந்த பெயர்தான். குல் > குலம் என்றால் சேர்ந்துவாழும் கூட்டம் அவ்வளவுதான்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
இன்று சாரம், அபச்சாரம் என்பவற்றைத் தெரிந்துகொள்வோம். அவற்றுடன் சொல்லாக்கத்தையும் அறிவோம்.
அபச்சாரம் என்ற சொல்லில் அப என்பதையும் அறிக. இவ் அப என்பது அவ என்று அறிக. அவ> அப என்பது வகர பகரப் போலி. இது எவ்வாறு என்பது பழைய இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது, ஒருமுறை விளக்கியதை இன்னொரு முறை சொல்லலாம். நீங்கள் அப்போது இவ்விடுகையைப் படிக்கவில்லை என்பதற்காக அதையே திரும்பவும் சொன்னால் அதை ஒன்றுடன் இரண்டான முறை வாசித்தவர்களுக்கு எரிச்சல் ஏற்படுமாகையால் இம்முறையில் கூறியது கூறுவதைத் தவிர்த்துவிடுகிறோம். நேரம் இருக்கும்போது பழைய இடுகைகளையும் படித்துக்கொள்ளுங்கள்.
அவ என்பதன் முழுச்சொல் அவம் என்பதுதான். அவ் என்பது மூலம். இது கிழித்து வேறாக்கி விடுதல், பிரித்துவிடுதல் என்று பொருள்தரும் மூலம். ஒன்றைப் பலவாறு விளக்கலாம் ஆதலின், நீங்கள் சற்று வேறுபட்டும் விளக்கிக் கொள்ளலாம். இறுதியில் பொருளை விளக்கம் செய்து இதே நிலைக்கு வருவீரானால் அதுவும் ஏற்றுக்கொள்ளற்குரியதே ஆகும். அவ்+ இழ் என்ற சொல்லும் அவிழ் என்றாகும் பின் அவிழ்தல் வினை. ஒன்றை அவிழ்க்குப்போது கட்டுகளை வேறாக்கிவிடுகிறோம். அதனால் இந்த அவிழ்தல் என்ற சொல்லையும் நாம் அறிந்துகொள்கிறோம்.
இதற்குமேல் பல சொல்லாமல் அபச்சாரம் என்ற சொல்லைப் பார்த்தால், சாரத்தைப் பிரித்துவிடுதல். சாரத்தை இல்லாமல் ஆக்குதல் என்ற பொருளைத் பெறுகிறோம். இப்போது அறிதலுக்கு நெருங்கிவிட்டோம். ஆனால் அவ் > அவி என்பதில் நீரில் போட்டு ஒன்றை அடுப்பில் வைத்து வேவிப்பதை அல்லவா உணர்கிறோம். ஆம், அதிலும் ஒன்றைப் பிரிப்பது, வேறாக்குவது, வேறு உருவிற் படுத்துவது என்று சொல்லி முன் கூறியவற்றுடன் பொருத்த முடிகிறது. அரிசியை வேவித்துச் சோறாக்கினால் அரிசியை வேறுபடுத்திவிட்டோம் என்பதற்குப் பொருந்துகிறது. குளிர்நீரைச் சூடாக்கினால் சுடுநீர் வேறுபொருள்தான். ஆனால் சுடுநீர் குளிர்ந்து மீண்டும் தண்ணீர் ஆனால் அப்படி ஆவது நீரின் தன்மை. அவி என்ற சொல்லின் பொருளை அது பாதிக்கவில்லை
அவ். அவ. அவி, அவிழ். அவிர். அவ> அப என்பன கண்டோம்.
திரைத்தவிர்தல் என்று ஒரு கூட்டுவினைச் சொல் இருக்கின்றது. ஒரு பொருள் விட்டுவிட்டு ஒளிசெய்தால் அது திரைத்து அவிர்தல் ஆகும். ஆகவே திரைத்தவிர் பன்மணி என்று குறித்தது ஒரு ஒளிசெய் மணியைச் சொன்னதுமுண்டு. திரைத்துணி சுருங்குவதும் பின் விரிவதும் உடையது. அதனால் அதைத் திரை என்றனர்.
திரைந்த தோலுடைய தவளை போன்ற உயிரி, தேரை எனப்பட்டது, திரை> தெரை என்று திரிந்து பின் முதல் நீண்டு தேரை என்று மாறிவிட்டது. முதலெழுத்து இவ்வாறு நீள்தல் தமிழில் பலகாலும் நிகழ்வதுதான்.
சாரம் என்ற சொல் ஒன்றைச் சார்ந்து இருத்தலையும் இருக்கும் தன்மையையும் குறிக்கும். சார்தல் என்பது சேர்தல் என்பதன் திரிபுதான். சார் என்ற வினைசொல் உகரம் பெற்று சாரு என்று வராமல் சாறு என்றே வரும். சொல்லிறுதிக்குச் ரு பொருந்தாது. சார்ந்து எழும் விளக்கங்கள், நெறிகள், உள்ளீடுகள் என எவையும் சாரம் ஆகும். இந்தச் சொல்லும் அதன் திரிபுகளும் மற்ற மொழிகளிலும் வருவதில் வியப்பு ஒன்றுமில்லை. அந்த மொழிகளை இங்கு விரித்தல் வேண்டியதில்லை.
சார்ந்து உள்ளவற்றை நிலைகுலையச் செய்யும் ஒரு செயலைத்தான் அபச்சாரம் என்கிறோம். ஒழுக்கமுறை அறநெறிகள் என எதையும் சார்ந்து எழுவன சாரம் ஆகும். சாறு என்பது சார்ந்து உள்ளிருக்கும் நீர்ப்பொருளைக் குறிப்பது காணலாம்.
சாறு என்ற சொல்லைச் சோறு என்ற சொல்லுடன் ஒப்பிடுக. அரிசி அவிக்கப்பட்டுத் தன் திடநிலையிலிருந்து சோர்ந்து விடுகிற காரணத்தால் - அதாவது மெதுவாகிவிட்ட காரணதால் - சோர் > சோறு என்றானது. இவை அமைப்பில் ஒன்றான சொற்கள். பொருள் வேறு.
ஆகவே சாரம் அபச்சாரம் பொருளும் அமைப்பும் அறிந்தோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
அரசன் என்ற சொல்லுக்கு அரட்டு என்ற சொல்லே அமைதற்கு உதவியுள்ளது என்பதைக் கூறுகிறோம். கீழ்க்கண்ட இடுகையையும் படித்து ஆராயவும்.
https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html
அரட்டு என்பது மிகுந்த ஒலிசெய்தலுடன் அதிகாரம் செலுத்துதலையும் குறிக்கும். இதிலிருந்து அரட்டன் என்ற சொல் பிறந்தது. அரட்டன் என்ற சொல் முன்னாளில் அரசனையும் குறித்தது. தொடக்கத்தில் அதிகாரம் செலுத்தினவன் அரட்டன் என்ற குறிப்பிடப் பட்டாலும் அரட்டி உருட்டுவதையே ஒரு செயல்முறையாகக் கொள்ளாமல் ஒவ்வொன்றையும் முறைப்படி ஆய்ந்து உதவிக் குழுவினருடன் கலந்தாய்ந்து அரசு நடத்தியவனுக்கு நாளடைவில் வேறு சொல் தேவைப்பட்டது. அதுவும் அர என்ற அடிச்சொல்லையே பயன்படுத்திப் புனையப்பட்டது. அரசு என்ற சொல் நடப்புக்கு வந்தது. இதிலிருந்து அரசன், அரசி என்ற சொற்களும் தோன்றின. இளவரசன் இளவரசி முதலியவையும் உண்டாயின.
அர என்ற அடி : அரவம் என்பதும் ஒலியே யாகும். வேறு பொருட்களும் உள. அர என்பதன் முன் உரு "அர்". அங் எனபதும் ஒலி எழுவதே. அர்ச்சித்தல் ஒலி யால் நடை பெறுவது ஆகும். அர லி என்பதே அரஹர என்று மாறுகிறது. ஒ லியால் உணரப் படு வோன் இறைவன். மந்திரங்கள் ஒலியால் அமைந்தவை.
தேசத்துரோகம் என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம்.
இஃது இணைப்புற்ற சொல் என்பது யாவரும் எளிதில் அறிவதே ஆகும்.
தேசம் என்ற சொல் இப்போது இந்தியாவிலும் பிற இடங்களிலும் அறியப்பட்ட சொல்லாயினும் இது முன்னர் தேயம் என்று இருந்தது. அதற்கும் முன்பு அது தேம், தேஎம் என்று அளபெழுந்தும் அளபெழாமலும் வழங்கியது.இதன் அடிச்சொல் தேய் அல்லது சிற்றூர் வழக்கில் தே என்பதே ஆகும். இதற்குரிய வினைச்சொல் தேய்தல் என்பதுதான். ஏன் இந்த அடியிலிருந்து இது வழங்கவேண்டு மெனில், எந்த நாடும் நாளடைவில் தேய்ந்துவிடக் கூடியது என்பதனால்தான். அரச னொருவனுக்கு பிள்ளைகள் இருந்தால் அந்தப் பிள்ளைகள் அரசன் இறந்தபின் நாட்டைப் பங்குவைத்துக் கொள்ளுதல் உள்ளது. ஐந்து பிள்ளைகள் ஐந்து பங்காகக் கொண்டனர் எனின் நாடு உடைந்து சிறு துண்டுகளாகிவிடும். இவ்வாறு நடவாவிட்டால் எதிரி நாட்டினர் வந்து தாக்கி நாட்டின் பகுதிகளைத் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வர். அப்போதும் நாடு துண்டுகளாகித் தேய்வுறும். இயற்கைப் பேரிடர்களாலும் நாட்டின் பகுதி அழிவுறுவதுண்டு. உள்நாட்டுக் கலகங்களையும் தேய்வுக்குக் காரணமாகக் கொள்ளலாம். கலகத்தால் ஒரு பகுதி விடுபட்டு தனியாட்சி அமைதல்.
தே அல்லது தேய் என்ற இரண்டையும் தொடர்புடைய வினைகளாகக் கொள்க.
துரோகம் என்ற சொல்லின் துருவுதல், ஓங்குதல் என்ற இரண்டு வினைகள் தொடர்புபட்டுள்ளன. துரோகம் செய்பவன் எப்படி ஒரு தீவினை செய்வது என்று துருவி ஆராய்ந்து செய்வான். இதை துரு என்ற சொல் தருகிறது. அடுத்து ஓங்குதல் என்ற சொல் ஓங்கு> ஓகு> ஓகு அம் > ஓகம் என்று பெயரைப் பிறப்பிக்கிறது.
இரு முழுச்சொற்களையும் இணைத்து, தேசத்துரோகம் என்றாகிறது. துரோகம் என்ற சொல் சிற்றூரில் வழக்குடையதுதான்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்