சில புலி வகைகளுடன் ஒப்பிடும் போது சிறுத்தை சற்று சிறிதாகவே உள்ளது. இதனால் இந்தப் பெயர் இவ்விலங்குக்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னர் விளக்கப்பட்டது.
ஆனால் இப்பெயர் கடுமையாகச் சீறுவதனாலும் ஏற்பட்டது என்று காரணமுள்ளது. அப்படியானால் :
சீறுதல் - சீறு > சீறு + தை > சிறுத்தை என்று குறுதலும் ஏற்புடையதே ஆகும். இதற்கு ஏற்புடைய சொல்லமைப்பு விதியாவது:
சா> சாவு > சாவம் ( சாவு+ அம்) > சவம் என்றும் குறுகி அமைதல் போன்றதே ஆகும். இது. தோண்டியது போல இருப்பது தொண்டை என்று குறுகுதலும் காணலாகும். ஆதலின் இவ்விலங்குப் பெயர்: இருபிறப்பி ஆகின்றது என்பதையும் அறியவேண்டும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
அடுத்த புதிய இடுகை: சாரங்கபாணி என்ற சொல்லமைப்பு.Thursday 1242 afternoon will be published.. படித்து மகிழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக