வெள்ளி, 6 செப்டம்பர், 2024

பக்தியோகம் என்றால் என்ன?

 யாம் நம் வலைப்பூவகத்தில் பல பக்தி சாற்றும் படங்களையும் சில வேளைகளில் கவிதைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறேம். அந்தக் கவிதைகள் அம்மனுக்கு ( ஸ்ரீ துர்க்கையம்மாவுக்கு) ப் படைக்கப்பட்டவை. இவற்றை வெளியிட்டபின் எம் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இதை அம்மா படித்திருப்பார்கள். இவற்றின்பின்னும் யாவும் குறையின்றி நடைபெற்றன. யாம் எதுவும் கேட்பதில்லை.  அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்டு அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் யாம் கொடுப்பதில்லை. குறை ஒன்று மில்லை.  எமக்கு காபி ( குளம்பிநீர்) உரொட்டி கிடைத்தாலும் அவையும் பாயசம்தான்.

அவர்களுக்குப் பூமாலை முதலிய அணிவித்துக் கொண்டாடுகிறேம். பிறர் அவ்வாறு செய்து படம் அனுப்பினாலும் கவிதையால் கொண்டாடுகிறேம்.

யாம் செய்வது பக்தியோகம்.

வேறு உலக மாந்தர் ( ஜாம்பவான்கள்)  வேறுவேறு செய்திருக்கலாம்.  இவர்கள் அத்தனை பேர்களைப் பற்றியும் யாம் கவலைப்படவில்லை. எம் மனம் அம்மனுக்கு. அம்மன் எம்முடன் எப்படித் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை யாம் ஏன் வெளியிடவேண்டும்.  விளம்பரம் தேவை யில்லை. அதுதான்பக்தியோகம்.


கருத்துகள் இல்லை: