புதன், 12 மே, 2021

கொரனா பரவல்

 கொரனா என்னும் கோவிட் 19,  இன்னொரு சுற்றைத் தொடங்கி உள்ளது என்று தெரிகிறது.  கொஞ்சம் ஓய்ந்தவுடன்  இறுதியை அடைந்துவிட்டதாகச் சில நாடுகள் எண்ணிவிட்டன,  அது தவறு என்பதை யாரும் உணர்ந்திருக்கவில்லை. இப்போதுதான் அறியத் தொடங்கி உள்ளோம்.

இது யாரும் எதிர்பார்க்காததுதான். கொரனா என்பது முன் நாம் அறியாத ஒன்று ஆகும்.  எந்தக் கொம்பனுக்கும் தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. கணிக்க முடியாத காலன் இந்தக் கொரனா,

மலேசியாவில் 1722 பேர் இறந்துள்ளனர். 

சிங்கப்பூரில் சில இடங்களில் பரவியுள்ளது.

இது பற்றித் தனிமனிதன் தான் கவனமாக இருக்கவேண்டும்.

மந்திரிகள் வந்து நமக்குக் கவசம் அணிவித்துவிடமாட்டார்கள்.  அது அவர்கள் வேலை இல்லை.






கருத்துகள் இல்லை: