ஞாயிறு, 30 மே, 2021

தயாளம்

 தயாளம் என்ற சொல்லைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

இதில் இரண்டு துண்டுகள் உள்ளன.  தயை  என்பதொன்று.  ஆளம் என்பது இன்னொன்று.  ஆளம் என்பது ஆளின்  தன்மை என்று பொருள்படும்.  

தயை என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_7.html

தயை என்பதை ஆளம் என்ற ஈற்றுடன் புணர்க்குங்காலை,  தயை என்பதன் இறுதி ஐ விகுதி கெடும் ( அதாவது அவ்விகுதி களைந்துவிடுதல் வேண்டும்). ஆகவே  தய + ஆளம் என்பவை சேரும்.

வன்மை பொருந்திய செயல்களைத் தவிர்த்து இரக்கம் காட்டுவதே தயாளம்.

தயாளம் என்று புணர்ந்து விளைதலின்,  இதுபோன்ற சந்திகள் தமிழில் உளவா என்று அறிதல் வேண்டும்.  உள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு:

மர + அடி =  மராடி என்பது காண்க. இஃது வகர உடம்படுமெய் இல்லாத புணர்ச்சி ஆகும். உடம்படு மெய் வரின்,  மர+ அடி > மரவடி என்று வரும். அல்லது அத்துச் சாரியை பெற்று,  மரம் + அத்து + அடி =  மரத்தடி எனவாகும்.

அத்து என்னும் சாரியை உண்மையில் அது என்னும் சுட்டுப்பெயரில் தோன்றிய இரட்டிப்புச் சொல் தான்.  அது >  அத்து. ( தகர இரட்டிப்பு).   த் + த் + உ >  த்து  ஆகும்.  "அது"   இதற்கு மூலம் என்பதைக் கூறுவதில்லை. 

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை: